
<p><span dir="auto">பிரிக்ஸ் 2026 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும்</span><span dir="auto">, ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுக்கும் இடையே இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது. மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில், இந்த இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நிகழ்ந்துள்ளது. முன்னதாக, பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்த பிரச்னையை பிரதமர் மோடி எழுப்பியிருந்தார்.</span></p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Delhi: Prime Minister Narendra Modi and Iranian President Masoud Pezeshkian hold a bilateral meeting on the sidelines of BRICS Summit 2026. <br /><br />(Pics: DD News) <a href="https://t.co/ZlO5BrIexz">pic.twitter.com/ZlO5BrIexz</a></p>
— ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2098405711005065690?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote>
<p><span dir="auto">
<script src="https://platform.x.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</span></p>
<h2><span dir="auto">கூட்டம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட வெளியுறவு அமைச்சகம் </span></h2>
<p><span dir="auto">புது டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனை சந்தித்தார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்தில், இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெறும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும். இதற்கு முந்தைய சந்திப்பு, ஆகஸ்ட் 31 அன்று பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்தது.</span></p>
<h2><span dir="auto">இரு தலைவர்களும் விவாதித்தது என்ன.?</span></h2>
<p><span dir="auto">இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர். சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், பிரிக்ஸ் தொடர்பான கூட்டங்களில் ஈரான் தொடர்ந்து உயர் மட்டத்தில் பங்கேற்பதை பிரதமர் மோடி பாராட்டினார். மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அனைத்து பிரச்னைகளும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். பிராந்தியத்தில், நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும், கப்பல் மற்றும் வர்த்தக சுதந்திரத்திற்கும், கடல் பயணிகளின் பாதுகாப்பிற்கும் தொடர்ச்சியான முயற்சிகள் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.</span></p>
<p><span dir="auto">மேலும், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன், இந்தியாவை சேர்ந்த மதத் தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் வணிகத் தலைவர்களை சந்திக்கும் 'ஸ்டாண்ட் வித் ஈரான்' நிகழ்வின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மினாபில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.</span></p>
<h2><span dir="auto">பிரிக்ஸ் வர்த்தக மன்றத் தலைவர்கள் அமர்வில் பெஷெஷ்க்யான் கூறியது என்ன.?</span></h2>
<p><span dir="auto">முன்னதாக, பிரிக்ஸ் வர்த்தக மன்றத் தலைவர்கள் அமர்வில், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன், உலகம் அதன் மிகவும் கடினமான காலங்களில் ஒன்றைக் கடந்து கொண்டிருக்கிறது என்று கூறினார். புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை, விநியோகச் சங்கிலித் தடைகள் மற்றும் அரசியல் அழுத்தத்தை பிரயோகிக்க, பொருளாதாரக் கருவிகளின் அதிகரித்த பயன்பாடு ஆகியவை, பொருளாதாரச் சூழலை மேலும் சிக்கலாக்கி, நாட்டின் பங்கை மோசமாக்கியுள்ளன. </span><span dir="auto">கேள்வி என்னவென்றால்: இந்த சவால்களுக்கு பிரிக்ஸின் பதில் என்ன.? பிரிக்ஸின் உண்மையான வலிமை அதன் உறுப்பு நாடுகளின் பொருளாதாரங்களின் அளவில் மட்டும் அடங்கியிருக்கவில்லை என்றும், மாறாக இந்த திறன்கள் வர்த்தகம், முதலீடு மற்றும் கூட்டு நிதியுதவி ஆகியவற்றின் வலைப்பின்னல்களாக மாற்றப்படும்போது அது மிகவும் தெளிவாக வெளிப்படுகிறது என்றும் நாங்கள் நம்புகிறோம். இதன் பொருள், சாத்தியமான ஒத்துழைப்பிலிருந்து உண்மையான, செயல்பாட்டு ஒத்துழைப்பிற்கு மாறுவதாகும் என்று பெஷெஷ்கியன் கூறினார்.</span></p>
<h2><span dir="auto">பெஷெஷ்கியன் - மோடி சந்திப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது.?</span></h2>
<p><span dir="auto">மேற்கு ஆசியப் பதற்றங்கள், மூலோபாய இணைப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றின் பின்னணியில், பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுக்கும் இடையிலான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. மத்திய கிழக்கு, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான மோதல்களால் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. பேச்சுவார்த்தைக்கான வழிகளை திறக்க இந்தியா தனது ராஜதந்திர செல்வாக்கை பயன்படுத்தும் என்று ஈரான் நம்பிக்கை தெரிவித்துள்ளது. </span></p>
<p> </p>
<p> </p>
<p><span dir="auto"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/know-who-should-not-consume-milk-health-guide-274231" width="631" height="381" scrolling="no"></iframe></span></p>
Source: Read Full Article