Iran Strait of Hormuz: ஹார்முஸ் விவகாரம்; வளைகுடா நாடுகளுடன் நடக்கவிருந்த சந்திப்பு; சவுதிக்காக ஒத்திவைத்த ஈரான்; காரணம் என்ன.?

Iran Strait of Hormuz: ஹார்முஸ் விவகாரம்; வளைகுடா நாடுகளுடன் நடக்கவிருந்த சந்திப்பு; சவுதிக்காக ஒத்திவைத்த ஈரான்; காரணம் என்ன.?
News Image
<p><span dir="auto">ஓமானில் இன்று டெஹ்ரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெறவிருந்த சந்திப்பை ஒத்திவைக்குமாறு சவுதி அரேபியா கோரிக்கை விடுத்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அமெரிக்க முற்றுகைக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக இன்று நடைபெறவிருந்த இந்த சந்திப்பு, தற்போது நடைபெறாது.</span></p> <p><span dir="auto">யேமனில் நடக்கும் போரை காரணமாகக் காட்டி, சவுதி அரேபியாவின் வேண்டுகோளுக்கு இணங்க, ஹார்முஸ் ஜலசந்தி குறித்து விவாதிப்பதற்காக இன்று ஓமானில் வளைகுடா நாடுகளுடன் நடைபெறவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஈரான் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.</span></p> <div class="mid-taboola"> <h2 id="taboola-mid-article-personalisation-3188678" class="trc_related_container tbl-trecs-container trc_spotlight_widget"><span dir="auto">இஸ்மாயில் பாகாயி அறிக்கை</span></h2> </div> <p><span dir="auto">ஈரான்-ஓமான் ஒப்பந்தம் பல வாரப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக உருவானது என்றும், அது இரு நாடுகளின் இறையாண்மை உரிமைகளை மதிக்கிறது என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறினார். அண்டை நாடுகள் தங்களின் கடந்தகால வேறுபாடுகளைக் களைந்து, பிராந்தியத்திற்கு வெளியிலிருந்து வரும் அழிவு சக்திகளின் செல்வாக்கை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.</span></p> <p><span dir="auto">முன்னதாக, தொழில்நுட்ப மற்றும் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஓமனும் ஈரானும் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக ஈரானிய பேச்சுவார்த்தைக் குழு கூறியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, ஆகஸ்ட் மாத இறுதியில், இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற கடைசி சந்திப்பில் இந்த உடன்பாடு எட்டப்பட்டது. புதிய ஒப்பந்தத்தின்படி, வளைகுடாவின் நுழைவுப் பாதை முழுவதுமாக ஈரானின் பிராந்திய நீர்ப்பரப்பிற்குள்ளும், வெளியேறும் பாதையின் ஒரு பகுதியும் ஈரானிய நீர்ப்பரப்பிற்குள்ளும் அமைகிறது.</span></p> <h2><span dir="auto">கூட்டத்தில் யார் கலந்துகொள்வார்கள்.?</span></h2> <p><span dir="auto">வளைகுடா கடற்கரை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் ஓமனில் திங்கட்கிழமை நடைபெறவிருந்ததாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி முன்னதாகக் கூறியிருந்தார். ஈரான், ஈராக் மற்றும் பல வளைகுடா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொள்ளவிருந்த இந்த கூட்டம், சவுதி அரேபியாவின் வேண்டுகோளைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</span></p> <p><span dir="auto">இந்த புதிய வழித்தடம், ஈரானிய அமைப்புகளின் கீழ் நிர்வகிக்கப்படும் என்று ஒரு ஈரானிய வட்டாரம் தெரிவித்துள்ளது. தெற்கு வழித்தடத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் தொடர்ச்சியான கோரிக்கையை மீறி, புதிய அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், ஹார்முஸ் ஜலசந்தியின் தெற்கு வழித்தடம் மூடப்படும்.</span></p> <p>&nbsp;</p> <p><span dir="auto"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/do-you-know-about-20-20-20-rule-eye-strain-protection-from-computer-mobile-screen-274508" width="631" height="381" scrolling="no"></iframe></span></p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks