DMK Sekar Babu : மாஜி அமைச்சர் சேகர்பாபுக்கு குறிவைத்த விஜய்.! 6 பிரிவில் வழக்கு -சுற்றிவளைக்கும் போலீஸ்- அடுத்தது என்ன.?

DMK Sekar Babu : மாஜி அமைச்சர் சேகர்பாபுக்கு குறிவைத்த விஜய்.! 6 பிரிவில் வழக்கு -சுற்றிவளைக்கும் போலீஸ்- அடுத்தது என்ன.?
News Image
<h2>திமுக மாஜிக்களுக்கு குறி</h2> <p>தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவிற்கு பிறகு தினந்தோறும் தமிழகத்தில் அதிரடி அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில்,&nbsp; திமுகவினரை குறிவைத்து கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் விஜய்யை ஒருமையில் விமர்சித்து பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், எதிர்கட்சி தலைவர் உதயநிதி என அடுத்தடுத்து கைது நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். அந்த வகையில் தற்போது முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை கைது செய்ய திட்டமிட்டுள்ளது தவெக அரசு.&nbsp; 6 பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.&nbsp;</p> <h2>&nbsp;சேகர்பாபு பேச்சுக்கு எதிர்ப்பு</h2> <p><a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> நிர்வாகியான ஜெகதீஸ்வரி என்பவர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில் கடந்த சட்டமன்ற &nbsp;கூட்டத் தொடரில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை&nbsp; த.வெ.க கட்சியின் தலைவரும் முதலமைச்ருமான ஜோசப் விஜய் கேலி செய்ததாக தவறான தகவலை கூறி&nbsp; தி.மு.க வினர் &nbsp;கடந்த 12.09.2026-ம் தேதி முதலமைச்சருக்கு எதிராக கண்டன ஆர்பாட்டத்தை&nbsp; நடத்தினர். அப்போது தி.மு.க வின் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் துறைமுக சட்டமன்ற உறுப்பினருமான &nbsp;பி.கே.சேகர் பாபு &nbsp;தலைமை ஏற்று நடத்தினார்.</p> <h2>&nbsp;சேகர்பாபு என்ன பேசினார்.?</h2> <p>போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு பேசியதை தூரத்திலிருந்து ஜெகதீஸ்வரி கேட்டதாகவும், அப்போது &nbsp;முதலமைச்சர் ஜோசப் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> அவர்களையும், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அவர்களையும் ஓடுகாளி நாயே என்று அசிங்கமாகவும் அநாகரிமாகவும் பேசியும் கோழை , சங்கி, தைரியமற்ற போன்ற வார்தைகளை பயன்படுத்தி பேசியதாக அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் த.வெ.க தொண்டர்களிடம் மனக்குமுறலை விளைவிக்கும் நோக்கிலும் கரூரில் 41 பேர் இறந்தவுடன் முதலமைச்சர் ஓடி ஒளிந்ததாகவும் 8 நாட்கள் கழித்து பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு பேசியதாகவும் அவரை தனி நபர் அவமானம் செய்துள்ளதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.</p> <h2>கைது செய்ய களம் இறங்கும் போலீஸ்</h2> <p>மேலும் அமைச்சர் &nbsp;நிர்மல்குமார் அவர்களை ஆர் எஸ் எஸ் டவுசர் பார்ட்டி என தரக் குறைவாக பேசுவதின் மூலம் பா.ஜ.க விற்கும் தி.மு.க தொண்டர்களுக்கிடையே கலவர பகை மூட்டி பொது அமைதியைக் சீர்குலைக்கும் &nbsp;வகையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு மேல் சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது ஆபாசமாக பேசுதல், தனிநபர் குறித்து அவதூறாக பேசி பொது அமைதியை குலைக்க முற்படுதல், மதம், இனம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இரு தரப்பினரிடையே வன்முறை தூண்டுதல்,&nbsp; பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு. வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் மீது முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/rice-or-roti-which-is-better-for-energy-274499" width="631" height="381" scrolling="no"></iframe></p> <p>&nbsp;</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks