
<h2>காவல்துறை அறிவிப்புகள்</h2>
<p>தமிழக சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் விஜய்யின் துறையான உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.அப்போது தனது துறையின் கீழ் 59 அறிவிப்புகளை முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> வெளியிட்டார். </p>
<ul>
<li>மாநிலத்திலுள்ள காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவலர் பணியிடங்கள் படிப்படியாக அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும். தமிழ்நாடு காவல் படையில் இவ்வாண்டில் 5,000 பெண் காவலர்கள் உட்பட மொத்தம் 10,000 காவலர்கள் நியமிக்கப்படுவர்.</li>
<li>போதைப் பொருள் பயன்பாட்டை வெற்றிகரமாக ஒழிக்கும் கிராமம் ஒன்றுக்கு ரூபாய் 10 இலட்சம் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும்.</li>
<li>ரூபாய் 212 கோடி ஒதுக்கீட்டில் காவல்துறை நவீனமயமாக்கப்படும். செயற்கை நுண்ணறிவு, நவீன டிஜிட்டல் தடயவியல், நிகழ்நேர கண்காணிப்பு அமைப்பு, நவீன தகவல் தொடர்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</li>
<li>லஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும், சிறப்புப் பிரிவுகளுக்கும் அனுமதித்திருந்த எதிர்பாரா செலவினம் (Contingency Fund) உயர்த்தி வழங்கப்படும்.</li>
<li>பணியின்போது துணிச்சலுடன் பணியாற்றி உயிரிழந்த காவல் துறையினரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூபாய் 1 கோடி வழங்கப்படும்.</li>
<li>பணிக்காலத்தில் இறக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை (Ex-gratia Payment) இருபது இலட்சம் ரூபாயிலிருந்து முப்பது இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.</li>
<li>வண்டலூர் அருகே அமைந்துள்ள தமிழ்நாடு காவலர் உயர் பயிற்சியகத்தில் (Tamil Nadu Police Academy) உள்விளையாட்டு அரங்கம் மற்றும் வெளிப்புற விளையாட்டு வசதிகள் ரூபாய் 23 கோடி செலவில் அமைக்கப்படும்.</li>
<li>சேலம் மற்றும் விழுப்புரம் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் புதிய மரபணு ឈប់ V (DNA TESTING FACILITY) சுமார் 14 கோடி செலவில் நிறுவப்படும்</li>
<li>6 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் 16 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.</li>
<li>10 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 131 புதிய குடியிருப்புகள் ரூபாய் 80 கோடி செலவில் கட்டப்படும்.</li>
<li>தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் பயிற்சிக் கழகத்தின் (Fire and Rescue Services Academy( ن பணிகள் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.</li>
<li>காவல் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக புதிய வாகனங்கள் ரூபாய் 200 கோடி செலவில் வாங்கப்படும்.</li>
<li>ஆவடி ஆணையரகத்தில் உள்ள ஆவடி காவல் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய பூந்தமல்லி காவல் மாவட்டமும் மற்றும் பூந்தமல்லி காவல் சரகம் பிரிக்கப்பட்டு திருமழிசை காவல் சரகமும் உருவாக்கப்படும்.</li>
<li>தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட சட்டம் ஒழுங்கு காவல் மாவட்டங்கள் மற்றும் சரகங்களை மறுசீரமைப்பு செய்து புதிதாக கிளாம்பாக்கம் காவல் மாவட்டம் உருவாக்கப்படும். மேலும், கூடுவாஞ்சேரி சரகத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக கிளாம்பாக்கம் காவல் சரகம் உருவாக்கப்படும்.</li>
<li>காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு காவல் பிரிவுகளின் தூய்மைப் பணிகள் வெளிமுகமை (outsourcing) மூலம் ஆண்டிற்கு ரூபாய் 60 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.</li>
<li>கோயம்புத்தூர் மாநகரம், காந்திபுரத்தில் காட்டூர் காவல் நிலையம் மற்றும் இதர அலுவலகக் கட்டடங்கள் ரூபாய் 21 கோடி செலவில் கட்டப்படும்.</li>
<li>நீலகிரி மாவட்டம், எமரால்டு காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் ரூபாய் 4.15 கோடி செலவில் கட்டப்படும்.</li>
<li>காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் ரூபாய் 3.29 கோடி செலவில் கட்டப்படும்.</li>
<li>சேலம் மாநகரம், கருப்பூர் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் ரூபாய் 2.65 கோடி செலவில் கட்டப்படும்.</li>
<li>தூத்துக்குடி மாவட்டம், குளத்தூரில் புதிய நகர காவல் நிலையக் கட்டடம் ரூபாய் 2.53 கோடி செலவில் கட்டப்படும்.</li>
<li>தென்காசி மாவட்டம், அய்யாபுரத்தில் புதிய ஊரகக் காவல் நிலையக் கட்டடம் ரூபாய் 2.14 கோடி செலவில் கட்டப்படும் .</li>
</ul>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/tata-altroz-facelift-car-mileage-features-specifications-details-272115" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<p> </p>
<p> </p>
Source: Read Full Article