தமிழகத்தின் கடைசி டீசல் வழித்தடத்திலும் மின்சார ரயில் ஓட்டம்: பட்டுக்கோட்டை–காரைக்குடி இடையே வெற்றிகரமாக பயணம்

தமிழகத்தின் கடைசி டீசல் வழித்தடத்திலும் மின்சார ரயில் ஓட்டம்: பட்டுக்கோட்டை–காரைக்குடி இடையே வெற்றிகரமாக பயணம்
News Image
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: தமிழகத்தின் கடைசி டீசல் வழித்தடமான பட்டுக்கோட்டை&ndash;காரைக்குடி இடையே வெற்றிகரமாக மின்சார இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது ரயில்வே வரலாற்றில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.</p> <p style="text-align: justify;">தமிழகத்தின் ரயில்வே வரலாற்றில் முக்கியமான மாற்றத்தை பதிவு செய்யும் வகையில், நீண்ட காலமாக டீசல் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த பட்டுக்கோட்டை&ndash;காரைக்குடி ரயில் வழித்தடத்தில் மின்சார ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. தமிழகத்தின் கடைசி டீசல் வழித்தடங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட இந்தப் பாதையும் மின்மயமாக்கப்பட்டுள்ளதால், தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக ரயில் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.</p> <p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/09/40cb2e081bb58f8376e1823581fc45911788960906042733_original.jpg" /></p> <p style="text-align: justify;">தமிழகத்தில் உள்ள ரயில் பாதைகளை முழுமையாக மின்மயமாக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, 72 கிலோமீட்டர் தொலைவு கொண்ட திருவாரூர்&ndash;பட்டுக்கோட்டை&ndash;காரைக்குடி ரயில் பாதையை முழுமையாக மின்மயமாக்கும் பணிகள் கடந்த 2025-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன.</p> <p style="text-align: justify;">இந்த வழித்தடம் நீண்ட காலமாக டீசல் இன்ஜின்களின் ஆதிக்கத்தில் இயங்கி வந்தது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கியமான ரயில் பாதையாக இருப்பதால், இந்த வழித்தடத்தை மின்மயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வந்தது.</p> <p style="text-align: justify;">அந்த கோரிக்கைக்கு தற்போது வடிவம் கிடைத்துள்ள நிலையில், மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக மின்சார ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.</p> <p style="text-align: justify;"><br />பட்டுக்கோட்டை&ndash;காரைக்குடி ரயில் வழித்தடத்தில் மின்வழித் தடங்கள் அமைக்கப்பட்டு, தேவையான தொழில்நுட்பப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், ரயில் பாதையின் மேல்பகுதியில் அமைக்கப்பட்ட மின்வழித் தடங்களில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டு, மின்சார ரயில் இன்ஜின் இயக்கத்திற்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது.</p> <p style="text-align: justify;">இந்த சோதனை ஓட்டம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பட்டுக்கோட்டையில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில் இன்ஜின், வழித்தடத்தின் மின்சார வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யும் வகையில் பல்வேறு பகுதிகள் வழியாக காரைக்குடி நோக்கிச் சென்றது.</p> <p style="text-align: justify;">பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில் இன்ஜின், பட்டுக்கோட்டை &ndash; பேராவூரணி &ndash; ஆயங்குடி &ndash; அறந்தாங்கி &ndash; வாளரமாணிக்கம் &ndash; பெரியகோட்டை &ndash; கண்டனூர் புதுவயல் ஆகிய ரயில் நிலையங்கள் மற்றும் பகுதிகள் வழியாகச் சென்று காரைக்குடியை அடைந்தது.</p> <p style="text-align: justify;">சோதனை ஓட்டத்தின்போது மின்வழித் தடங்கள், மின்சார இணைப்புகள், ரயில் பாதையின் தொழில்நுட்பத் தரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன. மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் இன்ஜின் சீராக இயங்குகிறதா, மின்சார விநியோகத்தில் தடைகள் உள்ளதா, மேல்மின்கம்பி அமைப்புகள் பாதுகாப்பாக உள்ளனவா என்பன உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களும் அதிகாரிகளால் கவனிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">இந்த முக்கியமான சோதனை ஓட்ட நிகழ்வில் தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் கணேஷ், தலைமை மின் பொறியாளர் (கட்டுமானம்) ராமநாதன், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் சத்யரத்தன், துணை தலைமை மின் பொறியாளர் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.</p> <p style="text-align: justify;">மேலும், பட்டுக்கோட்டை ரயில் நிலைய அலுவலர் பார்த்திபன் மற்றும் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் சங்கத்தைச் சேர்ந்த பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.</p> <p style="text-align: justify;">பட்டுக்கோட்டை&ndash;காரைக்குடி வழித்தடத்தில் நடைபெற்றுள்ள இந்த மின்சார இன்ஜின் சோதனை ஓட்டம், அந்தப் பகுதியின் ரயில்வே வளர்ச்சியில் முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. டீசல் ரயில்களுடன் ஒப்பிடும்போது மின்சார ரயில்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதுடன், இயக்கச் செலவையும் குறைக்கக்கூடியவை. மேலும், ரயில் சேவைகளை மேம்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் வேகமான மற்றும் கூடுதல் ரயில் சேவைகளை இயக்குவதற்கும் மின்மயமாக்கப்பட்ட பாதை உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <p style="text-align: justify;">டெல்டா மாவட்டங்களையும் தென் தமிழகத்தின் முக்கிய பகுதிகளையும் இணைக்கும் இந்த வழித்தடம் முழுமையாக மின்மயமாக்கப்பட்டிருப்பது, பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p> <p style="text-align: justify;">&ldquo;பல ஆண்டுகளாக டீசல் இன்ஜின்களின் ஓசையை மட்டுமே கேட்ட இந்த வழித்தடத்தில், இனி மின்சார ரயில்களின் புதிய பயணம் தொடங்க உள்ளது&rdquo; என்ற உற்சாகம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் நிலவி வருகிறது.</p> <p style="text-align: justify;">சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்து தேவையான பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அனுமதிகள் கிடைத்த பின்னர், இந்த வழித்தடத்தில் மின்சார இன்ஜின்களுடன் ரயில்கள் இயக்கப்படுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <p style="text-align: justify;">தமிழகத்தின் ரயில்வே கட்டமைப்பை நவீனப்படுத்தும் முயற்சியில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ள இந்த நிகழ்வு, &ldquo;தமிழகத்தின் கடைசி டீசல் வழித்தடத்திலும் மின்சாரப் புரட்சி&rdquo; என்ற புதிய வரலாற்றை பதிவு செய்துள்ளது.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks