பிரிந்து வாழ்ந்த மனைவி கொடூர கொலை - போன் டவர் லொகேஷனால் சிக்கிய கணவன்

பிரிந்து வாழ்ந்த மனைவி கொடூர கொலை - போன் டவர் லொகேஷனால் சிக்கிய கணவன்
News Image
<h2 dir="ltr"><strong>கணவன் - மனைவி இடையே தகராறு</strong></h2> <p dir="ltr">திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவர் நிலக்கோட்டையில் சர்வேயராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காளீஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் , இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.</p> <p dir="ltr">கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, காளீஸ்வரி தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் திண்டுக்கல் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் பாப்புலர் நகர் பகுதியில் தனியாக வீடு வசித்து வந்துள்ளார்.</p> <h2 dir="ltr"><strong>செல்போன் சிக்னல் மூலம் கண்டு பிடிப்பு</strong></h2> <p>இந்த நிலையில் கடந்த 11 - ம் தேதி காளீஸ்வரி வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்தனர்.</p> <p>இதையடுத்து காளீஸ்வரி கொலை செய்யப்பட்ட வீட்டின் அருகே பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, காளீஸ்வரி வீட்டில் இருந்து கடைசியாக அவரது கணவர் ஜெயசீலன் வெளியே சென்றது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.</p> <p>மேலும் அதே சமயத்தில் ஜெயசீலன் பயன்படுத்தி வந்த செல்போன் எண் , திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள அய்யலூர் பகுதியில் கடைசியாக செயல்பட்டு வந்ததும் , அதன் செய்யப்பட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.</p> <p>எனவே திண்டுக்கல் தாலுகா போலீசார் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் ஜெயசீலனின் செல்போன் தொடர்புகள் மற்றும் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட போது பதிவான டவர் லொகேஷன் உள்ளிட்ட தகவல்களை தீவிரமாக ஆய்வு செய்தனர்.</p> <h2><strong>கொலைக்கான காரணம் குறித்து விசாரணை ?</strong></h2> <p>இதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் , ஜெயசீலன் பாலகிருஷ்ணாபுரம் பாப்புலர் நகர் பகுதியில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது.</p> <p>செல்போன் சிக்னல் மூலம் அவர் பதுங்கியிருந்த இடத்தை உறுதி செய்த போலீசார், ஜெயசீலனை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து , காளீஸ்வரி கொலை தொடர்பாக ஜெயசீலனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.</p> <p>பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெயசீலனை நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் பின்னணியில் காளீஸ்வரி கொலை செய்யப்பட்டாரா, கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks