சென்னையில் வட மாநிலக் கொள்ளையர்களின் அட்டகாம்; தடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பதா? அன்புமணி கண்டனம்

சென்னையில் வட மாநிலக் கொள்ளையர்களின் அட்டகாம்; தடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பதா? அன்புமணி கண்டனம்
News Image
<p>சென்னை&nbsp; : சென்னை புறநகர்ப் பகுதிகளில் அதிகரித்து வரும் ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் தொடர் கொலைகளைத் தடுக்கத் தவறினதாகத் தமிழக காவல்துறை மற்றும் அரசுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p> <p>அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,</p> <p>சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த இரு வாரங்களில் மட்டும் &nbsp;3 இடங்களில் &nbsp;வங்கிகளின் &nbsp;ஏடிஎம்களை உடைத்தும், &nbsp;முழுமையாக கடத்திச் சென்றும் &nbsp;கொள்ளையடித்திருக்கிறார்கள். வட இந்தியக் கொள்ளையர்களின் &nbsp;தொடர் &nbsp;ஏடிஎம் கொள்ளைகள் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவற்றைத் தடுக்க காவல்துறை தவறியது கண்டிக்கத்தக்கது.</p> <p>திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள &nbsp;ஏடிஎம்மை இரு வாரங்களுக்கு முன் தகர்த்தக் &nbsp;கொள்ளையர்கள் அதில் வைக்கப்பட்டிருந்த &nbsp;ரூ.11.50 லட்சத்திற்கும் கூடுதலான பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அந்த பதட்டம் அடங்குவதற்கு முன்பாகவே &nbsp;குன்றத்தூர் - திருப்பெரும்புதூர் &nbsp;சாலையில் சோமங்கலம் என்ற இடத்தில் இன்னொரு வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்மை தகர்த்து அதிலிருந்த &nbsp;ரூ.10 லட்சத்திற்கும் கூடுதலான தொகையை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மூன்றாவதாக திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியை அடுத்தக் கூடப்பாக்கத்தில் உள்ள ஏடிஎம் எந்திரத்தை கொள்ளையர்கள் நேற்று முழுமையாக தூக்கிச் சென்றுள்ளனர்.</p> <p>3 ஏடிஎம் கொள்ளைகளையும் இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் தான் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இரண்டாவது ஏடிஎம் கொள்ளையை நிகழ்த்திய கும்பலை கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி தெலுங்கானா - மராட்டிய எல்லையில் காவல்துறையின் சிறப்புப்படைகள் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்ற போது அந்த கும்பல் &nbsp;அவர்களிடமிருந்து தப்பி ஹரியானாவுக்கு ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது மூன்றாவது ஏடிஎம் கொள்ளையை நிகழ்த்தியவர்கள் யார்? ஏற்கனவே இரு கொள்ளைகள் நிகழ்ந்த நிலையில், ஏடிஎம்கள் மீதான கண்காணிப்பை வலுப்படுத்த காவல்துறை தவறியது ஏன்?</p> <p>இன்னொருபுறம் சென்னை பெசண்ட் நகரில் ஆளும் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a>வின் நிர்வாகியும், கொலை உள்ளிட்ட குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டவருமான &nbsp;கண்ணன் என்பவர் ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்திருப்பதும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. &nbsp;சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் &nbsp;கொலை, கொள்ளைகளைத் தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.</p> <p>வட மாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையர்கள் எந்த அச்சமும் இல்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்து &nbsp;ஏடிஎம் கொள்ளைகளில் ஈடுபடுவதும், &nbsp;கொலைக்குற்றங்கள் அதிகரிப்பதும் &nbsp;ஆட்சியின் தோல்வியாகவே கருதப்படும். இத்தகைய குற்றங்கள் இனியும் நடக்காத வகையில் காவல்துறை கண்காணிப்பையும், &nbsp;உளவுத்துறையின் செயல்பாடுகளையும் &nbsp;வலுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks