
<p>தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. </p>
<ul>
<li>பொதுமக்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கிடவும் சார்பதிவகங்களின் பணிப்பளுவைப் பகிர்ந்தளிக்கவும், ஒரு வருவாய் கிராமத்தை முழுமையாக ஒரே சார்பதிவக எல்லைக்குள் கொண்டு வரும் வகையில் சார்பதிவாளர் அலுவலக ஆட்சி எல்லைகள் மறுசீரமைக்கப்படும்.</li>
<li>15.09.2026 முதல் வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் கடன் பெறும் போது உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு மற்றும் இரசீது ஆவணங்கள், நேரடி வருகை இல்லா ஆவணப்பதிவு முறை (Presenceless Registration) செய்வது கட்டாயமாக்கப்படும்.</li>
<li>15.10.2026 முதல் நான்கு வகையான குடும்ப ஏற்பாடு ஆவணங்கள் காகிதமற்ற பதிவு முறையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு இணைய வழியில் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்படும்.</li>
<li>2018 முதல் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள் மையக்கணினி माळ (Server Side Certificate) விண்ணப்பதாரர்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.</li>
<li>பொதுமக்கள் மின்-செலுத்தல் (e-payment) மூலம் உரிய கட்டணம் செலுத்தியவுடன், 2018 முதல் பதிவு செய்யப்பட்ட திருமணச் சான்றிதழ்கள், சங்கங்கள்/சீட்டுப் பதிவு மற்றும் கோர்வை ஆவணங்கள் மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்ட பிறப்பு/இறப்புச் சான்றிதழ்களின் நகல்கள், மையக்கணினி சான்றிதழ் மூலம் நேரடியாக விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.</li>
<li>2018 முதல் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள் மையக்கணினி माळी (Server Side Certificate) விண்ணப்பதாரர்களுக்கு நேரடியாக அனுப்பி வைத்தல்.</li>
<li>வருகையில்லா ஆவணப் பதிவு விரிவாக்கம் செய்யப்பட சார்பதிவாளர்களின் உள்ளதால், வேலைப் பளுவைக் குறைக்கும் நோக்கில், சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும். சனிக்கிழமை கட்டாயப்பணி முறை கைவிடப்படும்.</li>
<li>பதிவுத்துறை "எங்கிருந்தும் பதிவு" என்னும் குறிக்கோளை நோக்கி முன்நகர்கிறது. சார்பதிவாளர்கள் ஆவணப் பதிவு மட்டுமின்றி, பல்வேறு கூடுதல் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. சனிக்கிழமைகளிலும் தொடர்ந்து ஆவணப் பதிவு மேற்கொள்வதால் அலுவலகப் பணிகளில் பின்னடைவு ஏற்படுகிறது. வருங்காலங்களில் அனைத்து ஆவணங்களும் வருகையில்லா பதிவு மற்றும் காகிதமில்லா முறையில் பதிவுக்கு அனுமதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதால், சார்பதிவாளர்களால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பதிவுச் சேவைகளின் தரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் 100 சார்பதிவாளர் தற்போது அலுவலகங்களில் நடைமுறையில் உள்ள சனிக்கிழமை கட்டாயப்பணி முறையானது கைவிடப்படும்.</li>
</ul>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/refrigerator-wall-clearance-how-much-space-is-needed-273698" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<p> </p>
Source: Read Full Article