அட்டைப் பிள்ளையாரால் நேர்ந்த பேரழிவு! பட்டுக்கோட்டையில் கதறும் தொழிலாளர்கள்!

அட்டைப் பிள்ளையாரால் நேர்ந்த பேரழிவு! பட்டுக்கோட்டையில் கதறும் தொழிலாளர்கள்!
News Image
<p style="text-align: justify;">பட்டுக்கோட்டை: அட்டைப் பிள்ளையாரால் அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ள மண்பானை தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். களிமண் பிள்ளையாருக்கு வரவேற்பு குறைந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">தஞ்சை மாவட்டத்தில் தலைமுறை தலைமுறையாக களிமண் மண்பானை மற்றும் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், தற்போது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அட்டைகள், சுண்ணாம்பு உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்படும் பிள்ளையார் சிலைகள் அதிகளவில் விற்பனைக்கு வருவதால், பாரம்பரிய முறையில் களிமண்ணால் பிள்ளையார் சிலைகள் செய்து வரும் தொழிலாளர்களின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.</p> <p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/05/2976439dd477b3c8dfcdb2b49764ea7a1788610964432733_original.jpg" /></p> <p style="text-align: justify;"><strong>தலைமுறை தொழிலுக்கு ஏற்பட்ட பின்னடைவு</strong></p> <p style="text-align: justify;">தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஏனாதி கிராமத்தில் சுமார் 8 குடும்பத்தினர் பல தலைமுறைகளாக மண்பானை தொழிலை செய்து வருகின்றனர். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக விநாயகர் சதுர்த்தி காலங்களில் களிமண்ணால் பிள்ளையார் சிலைகள் தயாரிப்பது இவர்களின் முக்கிய தொழிலாக இருந்து வந்துள்ளது.</p> <p style="text-align: justify;">விநாயகர் சதுர்த்தி நெருங்கும் காலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆர்டர்கள் குவியும். குடும்பம் முழுவதும் இரவு, பகல் பாராமல் சிலைகளை தயாரித்து வந்தனர். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ஆண்டு முழுவதும் குடும்பச் செலவுகளை சமாளித்து வந்தனர்.</p> <p style="text-align: justify;">ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். முன்பு இருந்த அளவுக்கு களிமண் பிள்ளையாருக்கு ஆர்டர்கள் வருவதில்லை. இதனால் தொழில் முடங்கியதுடன், பாரம்பரியமாக செய்து வந்த தொழிலையே கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.</p> <p style="text-align: justify;"><strong>சுற்றுச்சூழலுக்கு உகந்த களிமண் சிலைகள்</strong></p> <p style="text-align: justify;">இத்தொழிலாளர்கள் இயற்கையான களிமண்ணை பயன்படுத்தியே பிள்ளையார் சிலைகளை உருவாக்குகின்றனர். எந்தவித ரசாயனப் பொருட்களையும் கலக்காமல், பாரம்பரிய முறைகளையும், தங்களது தொழில் சார்ந்த ஆச்சாரங்களையும் பின்பற்றி சிலைகளை தயாரித்து வருகின்றனர்.</p> <p style="text-align: justify;">இவ்வாறு தயாரிக்கப்படும் களிமண் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கும்போது எளிதில் மண்ணோடு கலந்து விடுகின்றன. இதனால் நீர்நிலைகளில் உள்ள மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இயற்கைக்கு ஏற்ற முறையில் தயாரிக்கப்படுவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.</p> <p style="text-align: justify;"><strong>அட்டைப் பிள்ளையாருக்கு அதிக வரவேற்பு</strong></p> <p style="text-align: justify;">இந்நிலையில், அட்டை, சுண்ணாம்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பயன்படுத்தி அழகிய வடிவங்களில் தயாரிக்கப்படும் சிலைகள் சந்தையில் அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன. அவற்றில் பல வண்ணங்களில் ரசாயன வர்ணங்கள் பூசப்படுவதால் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் அவற்றை அதிகளவில் வாங்குவதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p> <p style="text-align: justify;">இத்தகைய சிலைகளால் தங்களது பாரம்பரிய தொழில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த களிமண் பிள்ளையாரை தயாரித்தாலும், அதற்கு உரிய சந்தை கிடைக்காததால் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறியாகி விட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.</p> <p style="text-align: justify;"><strong>பாரம்பரிய மண்பாண்டத் தொழிலை காப்பாற்ற அரசு கைகொடுக்குமா?</strong></p> <p style="text-align: justify;">பல தலைமுறைகளாக காப்பாற்றி வரும் இந்த பாரம்பரிய மண்பாண்டத் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதே தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. களிமண் சிலைகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்துதல், அரசு சார்பில் கொள்முதல் செய்தல், கண்காட்சிகள் மற்றும் விற்பனை மையங்கள் அமைத்தல், தொழிலாளர்களுக்கு நிதியுதவி மற்றும் தேவையான மூலப்பொருட்களை எளிதில் கிடைக்கச் செய்தல் போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p> <p style="text-align: justify;">இயற்கையை காக்கும் களிமண் பிள்ளையாரை உருவாக்கும் கைகள், இன்று தங்களது வாழ்க்கையை காக்க உதவிக்கரம் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தலைமுறைகளின் பாரம்பரியத்தை காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா என்பதே மண்பானை தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks