தேர்தல் ஆதரவு முதல் சாதிவாரி கணக்கெடுப்பு வரை… அன்புமணியின் அதிரடி பேட்டி!

தேர்தல் ஆதரவு முதல் சாதிவாரி கணக்கெடுப்பு வரை… அன்புமணியின் அதிரடி பேட்டி!
News Image
<p>விழுப்புரம்: சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு விரைவில் நடத்த வேண்டும்; தனியார் நிறுவனங்களில் 80% வேலை உள்ளூர் இளைஞர்களுக்கு - சட்டம் கொண்டுவர வேண்டும்; யு.பி.ஐ. கட்டண முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்; <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> தேர்தல் ஆதரவு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கு பிறகு அறிவிப்போம் என தைலாபுரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</p> <p>விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள் விழா மற்றும் இடஒதுக்கீடு போராட்ட தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்குள்ள தந்தை பெரியார் சிலைக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.</p> <p>தொடர்ந்து வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி கொடிகளை கொடிக்கம்பங்களில் ஏற்றி வைத்தனர். பின்னர் பா.ம.க. அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த 21 இடஒதுக்கீடு போராட்ட தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.</p> <p>பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-</p> <p>பாட்டாளி மக்கள் கட்சி தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் ஆகியோரை கொள்கைத் தலைவர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டது. தந்தை பெரியார் இல்லையென்றால் தமிழ்நாட்டில் சமூக நீதி கிடைத்திருக்காது. அவரது நீண்டநாள் கோரிக்கையான சமூக நீதிக் கணக்கெடுப்பு எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு விரைவில் நடத்த வேண்டும். அனைத்து பின்தங்கிய சமூகங்களுக்கும் இடஒதுக்கீடு மட்டுமின்றி நலத்திட்டங்களையும் வழங்கி அவர்களை முன்னேற்ற வேண்டும்.</p> <p>இன்று பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள். அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து இந்தியாவின் வளர்ச்சிக்காக பல்வேறு சாதனைகளை செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன்.</p> <p>1987-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி நடைபெற்ற ஒருவார சாலை மறியல் போராட்டத்தின் முதல் நாளில் 21 பேர் உயிரிழந்தனர். அவர்களின் தியாகத்தின் அடிப்படையில்தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை டாக்டர் ராமதாஸ் போராடிப் பெற்றுத் தந்தார். இது துக்க நாள் அல்ல. எதிர்கால தலைமுறையினர் கல்வி கற்று, வேலைவாய்ப்பு பெற்று, சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூரும் நாள்.</p> <h2>இடைத்தேர்தல் ஆதரவு</h2> <p>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பா.ம.க. யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆலோசனை முடிந்த பின்னர் முடிவு அறிவிக்கப்படும்.</p> <h2>முதலீடுகளை ஈர்க்க வேண்டும்</h2> <p>முதலமைச்சர் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்ப்பது அவசியமானது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மேலும் முதலீடுகளை ஈர்க்க வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது அரசின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும்.</p> <p>வெளிநாடுகள் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் இருப்பதை எடுத்துக்கூற வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனுமதிகள், வரிச்சலுகைகள் உள்ளிட்டவற்றை வழங்கி முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் 80 சதவீத வேலைவாய்ப்புகளை உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்.</p> <h2>ஒப்பந்த பணியாளர் முறைக்கு எதிர்ப்பு</h2> <p>போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பொதுத்துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவதை தவிர்க்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதில்லை. எனவே இது சமூக நீதிக்கு எதிரானது. போக்குவரத்துத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.</p> <p>அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கடந்த ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட தவறான கொள்கைகளை இந்த அரசும் தொடரக்கூடாது.</p> <h2>மாணவர்களுக்கு கட்டண சலுகை</h2> <p>தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான ஆண்டு கட்டணத்தை ரூ.2,800-ல் இருந்து ரூ.12 ஆயிரமாக அரசு உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது. இதே சலுகையை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.</p> <h2>பி.சி.ஆர். வழக்குகள்</h2> <p>விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பி.சி.ஆர். வழக்குகள் விசாரணையின்றி அரசியல் அழுத்தத்தின் காரணமாக பதிவு செய்யப்படுவதாக கூறப்படும் புகார்களை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் மாணவர்கள் அரசு வேலைக்கு செல்வதில் ஏற்படும் சிக்கல்களை சரிசெய்ய வேண்டும். அமைதியான சூழல் நிலவினால்தான் வளர்ச்சி ஏற்படும்.</p> <h2>ஊழல் புகார்களுக்கு விசாரணை</h2> <p>கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்கள் குறித்து பா.ம.க. சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவை குறித்து விசாரணை நடத்த வேண்டும். தென் மாவட்டங்களில் கனிம கொள்ளை மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் விவகாரத்திலும் விசாரணை நடத்தி, சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட சொத்துகள் இருந்தால் அவற்றை பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்.</p> <h2>யு.பி.ஐ. கட்டணம்</h2> <p>அக்டோபர் 15-ந் தேதி முதல் யு.பி.ஐ. மூலம் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் பணம் செலுத்தினால் 0.4 சதவீதம், அதிகபட்சமாக ரூ.300 வரை கட்டணம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கட்டணமாக இருந்தாலும் இறுதியில் அதன் சுமை நுகர்வோர் மீது விழும். எனவே இந்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.</p> <h2>ஹைட்ரோகார்பன், பரந்தூர் திட்டங்கள்</h2> <p>மயிலாடுதுறை மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ளதால் அங்கு ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு மாநில அரசு அனுமதி வழங்கக்கூடாது. மீறி அனுமதி வழங்கப்பட்டால் கடுமையான போராட்டம் நடத்தப்படும்.</p> <p>பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக 5,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டம் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் கைவிடப்பட்ட நிலையில், அதே பகுதியில் செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்கப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.</p> <p>கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலைகளால் நீர், நிலம், காற்று மாசுபடுவதாகவும், இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் என்.எல்.சி. நிறுவனத்துக்காக இனி ஒரு பிடி நிலம்கூட கையகப்படுத்தி வழங்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும் என்றார்.</p> <h2>மின்சாரம், சுகாதாரம்</h2> <p>கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தைவிட இந்த ஆண்டு சுமார் 4 ஆயிரம் மெகாவாட் கூடுதல் மின்சார தேவை ஏற்பட்டுள்ளதாகவும், மின்தடை இல்லாமல் மின்சாரம் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார். எச்1என்1, கொரோனா மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் கை, கால், வாய் நோய் குறித்து சுகாதாரத்துறை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.</p> <h2>காவிரி நீர்</h2> <p>மேட்டூர் அணை திறக்கப்பட்டு 10 நாட்கள் ஆகியும் காவிரி டெல்டாவின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவில்லை. கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பதால் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து தமிழகத்துக்கான காவிரி நீரை பெற்றுத்தர அழுத்தம் கொடுக்க வேண்டும்.</p> <p>இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks