ஆட்டோவில் மலர்ந்த கள்ளக் காதல் !! கணவன் - காதலன் இடையே கைக்கலப்பு...இறுதியில் நேர்ந்த விபரீதம்

ஆட்டோவில் மலர்ந்த கள்ளக் காதல் !! கணவன் - காதலன் இடையே கைக்கலப்பு...இறுதியில் நேர்ந்த விபரீதம்
News Image
<h2 dir="ltr"><strong>"திருமணம் மீறிய உறவு"</strong></h2> <p dir="ltr">திருப்பத்தூர் மாவட்டம் , ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் 26 வயதுடைய பாலச்சந்திரன். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த காவியா என்ற பெண்ணுடன் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.</p> <p dir="ltr">தற்போது இந்த தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் பாலச்சந்திரன் ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள ஸ்டிக்கர் கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். அதே போல், புதிய மின்னூர் ராமர் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் 36 வயதுடைய வசந்த் , ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.</p> <p>இந்த நிலையில், வசந்துக்கும் காவியாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆட்டோவில் செல்லும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.</p> <h2><strong>தூக்கிட்டு தற்கொலை</strong></h2> <p>இது குறித்து பாலச்சந்திரனுக்கு தெரிய வந்த நிலையில், அவர் தனது மனைவி காவியாவிடம் இது தொடர்பாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனிடையே பாலச்சந்திரனுக்கும் வசந்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் , அது பின்னர் கைகலப்பாக மாறியதாகவும் கூறப்படுகிறது.</p> <p>இதில் பாலச்சந்திரன் தாக்கியதில் காயமடைந்த வசந்த், தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவரது மாமியார் வீட்டில் இருந்த பாலச்சந்திரன் தனது மாமியார் வீட்டில் இருந்த சிமெண்ட் கூரையின் கம்பியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.</p> <p>இதனைப் பார்த்த காவியா, அவரை மீட்டு ஆட்டோ மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பாலச்சந்திரனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.</p> <p>இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் நகர காவல் துறையினர் மருத்துவமனைக்கு சென்று பாலச்சந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p> <p>பாலச்சந்திரனின் உயிரிழப்புக்கு திருமணத்தை மீறிய உறவு விவகாரம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks