Asia Cup: மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்

Asia Cup: மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்
News Image
<p><strong>Asia Cup Pakistans Mohsin Naqvi:</strong> பிசிசிஐ உத்தரவின் பேரிலேயேமொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெறவில்லை என இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் விளக்கமளித்துள்ளார்.</p> <h2><strong>ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி:</strong></h2> <p>மகளிர் ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சஃபாலி வர்மா மற்றும் ஸ்மிரிதி மந்தனா ஆகியோரின் அதிரடியான அரைசதங்களால், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் கேப்டன் அட்டபட்டு, விஷ்மி குணரத்னே மற்றும் நிலக்&zwnj;ஷி டி சில்வா ஆகியோரை தவிர மற்ற அனைவருமே ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 111 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆக, ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஒருநாள் வடிவ போட்டிகளில் 4 முறை, டி20 வடிவ போட்டிகளில் 4 முறை என மொத்தம் 8 முறை இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/why-is-laughing-dangerous-lets-know-details-in-pics-274301" width="631" height="381" scrolling="no"></iframe></p> <h2><strong>மீண்டும் கோப்பையை வாங்க மறுத்த இந்திய அணி:</strong></h2> <p>இந்திய அணியின் அபார வெற்றியை தொடர்ந்து பரிசளிக்கும் விழா தொடங்கியது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இரண்டாவது இடம் பிடித்த இலங்கை அணிக்கான பரிசுத்தொகையை வழங்கியதுமே, அந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. ஆனால், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீராங்கனைகள் மெடல்களையும், கோப்பையையும் பெறாவே இல்லை. ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவராக பாகிஸ்தானின் மொஹ்சின் நக்வி தொடர்வதால், அவரிடம் இருந்து கோப்பையை பெற இந்திய அணி விரும்பவில்லை. முன்னதாக ஆடவர் அணி ஆசியகோப்பையை வென்றபோதும், அவரிடம் இருந்து கோப்பையை பெற மறுத்தது குறிப்பிடத்தக்கது. பிசிசிஐ உத்தரவின் பேரிலேயேமொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெறவில்லை என இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் மஜும்தார் விளக்கமளித்துள்ளார்.</p> <p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/n6F5ZmTxlAM?si=v9aWMEfHGZc0RCKV" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p> <h2><strong>&nbsp;இந்தியாவின் வாய்ப்பை நிராகரித்த மொஹ்சின் நக்வி</strong></h2> <p>இதுதொடர்பாக பேசிய பிசிசிஐ செயலாளர் சைகியா, &ldquo;மொஹ்சின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையை பெற இந்தியா எப்போதும் விரும்பவில்லை. அதற்காக இரண்டு மாற்றும் ஆலோசனைகளையும் நாங்கள் பரிந்துரைத்தோம். அதன்படி, ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் துணை தலைவர் காலித் அல் ஜரூனி இந்திய அணிக்கு கோப்பையை வழங்கலாம் அல்லது புதிய விதியின்படி போட்டியில் வெற்றி பெறும் வாரியத்தின் பிரதிநிதி கோப்பையை வழங்க அனுமதிக்கப்படலாம் என வலியுறுத்தினோம். ஆனால், அந்த இரண்டு பரிந்துரைகளயும் நக்வி நிராகரித்துவிட்டார். இந்திய அணியும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து கோப்பையை ஏற்க மறுத்துவிட்டது.</p> <p><a title="TN Weather News: கனமழைக்கு அதிக வாய்ப்பு - 13 மாவட்டங்களுக்கு இன்று அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை" href="https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-rain-alert-chennai-weather-forecast-tn-today-meteorological-department-warning-september-14th-rain-alert-for-15-districts-274435" target="_self">இதையும் படியுங்கள்: TN Weather News: கனமழைக்கு அதிக வாய்ப்பு - 13 மாவட்டங்களுக்கு இன்று அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை</a></p> <h2><strong>ஆடவர் அணி செய்த சம்பவம்</strong></h2> <p>முன்னதாக கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற ஆடவர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இதேபோன்ற ஒரு பிரச்னை வெடித்தது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 147 ரன்கள் இலக்கை எளிதில் எட்டி இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ஆனால், அதன் பிறகு கோப்பை வழங்கும் விழா தொடங்க ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. நக்விக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கோப்பையை வழங்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றமான உறவுகளைச் சுட்டிக்காட்டி இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.&nbsp; ஆனால், நக்வி அதனை நிராகரித்து, இந்திய கேப்டன் தன்னிடம் இருந்துதான் கோப்பையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என பிடிவாதமாக இருந்தார். இதனால் இந்திய அணி கோப்பையை பெறாமலேயே அந்த விழாவும் முடிவுற்றது குறிப்பிடத்தக்கது.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks