" திருடிய நகையில் ரூ.10 லட்சத்தில் புது கார் " ஜாலியாக சுற்றிய தம்பதியை தூக்கிய காட்பாடி போலீஸ்

" திருடிய நகையில் ரூ.10 லட்சத்தில் புது கார் " ஜாலியாக சுற்றிய தம்பதியை தூக்கிய காட்பாடி போலீஸ்
News Image
<h2 dir="ltr"><strong>"36 சவரன் நகை திருட்டு"</strong></h2> <p dir="ltr">வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியை மரியா. கடந்த மாதம் 27-ம் தேதி மரியா தனது கணவர் ரவிக்குமாருடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் , இருவரும் வீடு திரும்பிய போது தங்கள் வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போயினர். விரைவாக வீட்டுக்குள் சென்று பார்வையிட்ட போது, அறைகளில் இருந்த பீரோக்களும் உடைக்கப்பட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 36 பவுன் தங்க நகைகளும் திருடு போனது தெரிய வந்தது.</p> <p>இதையடுத்து , காட்பாடி காவல் நிலையம் சென்று புகாரளித்தனர். உடனே விசாரணையில் இறங்கிய போலீஸாரும் சம்பவ பகுதிகளைச் சுற்றிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் தெரிய வந்த சந்தேகத்திற்கிடமான நபர்களையும் அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.</p> <h2><strong>சரித்திர பதிவேடு குற்றவாளி</strong></h2> <p>ஆந்திர மாநில எல்லையோரமுள்ள `டெல்' பகுதியில் காரில் இளம் பெண்ணுடன் சுற்றி வந்த நபரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் முத்துவேல் கார்த்திக் என்பதும் , உடன் இருந்த பெண் அவரின் மனைவி பிரபாவதி என்பதும் தெரிய வந்தது.</p> <p>ஓய்வு பெற்ற ஆசிரியையின் வீட்டில் கைவரிசை காட்டியதையும் முத்துவேல் கார்த்திக் ஒப்புக் கொண்டார். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் , விருதுநகர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளும் , கொள்ளை வழக்குகளும் இருப்பதும் , தொடர் குற்றச் செயல்கள் காரணமாக சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் போலீஸாரால் அவர் கண்காணிக்கப்பட்டு வந்திருக்கிறார் எனவும் தெரிய வந்திருக்கிறது.</p> <h2><strong>"புதிய நகைகள் வாங்கி சொகுசு"</strong></h2> <p>திருடும் நகைகளை அரக்கோணம் , திருத்தணி போன்ற பகுதிகளிலுள்ள நகைக் கடைகளில் ஜோடியாகச் சென்று அடகு வைப்பது அல்லது விற்று விட்டு புதிய நகைகளாக வாங்குவது என சொகுசாக இருந்திருக்கின்றனர். அப்படி வாங்கும் புதிய நகைகளை மனைவிக்கு அணிவித்து அழகுப் பார்த்திருக்கிறார் முத்துவேல் கார்த்திக்.</p> <p>கணவரின் எல்லாத் திருட்டுக்கும் மனைவி பிரபாவதியும் உடந்தையாக இருந்து வந்திருக்கிறார். சமீபத்தில் , ஆசிரியையின் வீட்டில் திருடிய நகைகளையும் விற்று , அதில் கிடைத்த பணத்தை வைத்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய கார் ஒன்றையும் வாங்கியிருக்கிறார்கள். அந்த காரில் மனைவி , பிள்ளைகளையும் அழைத்துச் சென்று மேலும் சில வீடுகளையும் நோட்டமிட்டு கைவரிசைக் காட்டத் திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.</p> <h2><strong>" வேறு எங்கு திருடலாம் "</strong></h2> <p>ஆசிரியையின் வீட்டில் திருடிய பின்னர் புதிய காரில் காட்பாடியிலுள்ள சித்தூர் பேருந்து நிறுத்தப் பகுதிக்கும் வந்து டாஸ்மாக் கடையில் பீர் வாங்கிக் குடித்து விட்டு , வேறு எங்குத் திருடலாம் என்றும் நோட்டமிட்டுச் சென்றிருக்கிறார் முத்து வேல் கார்த்திக். இதையடுத்து , முத்துவேல் கார்த்திக்கிடம் இருந்து சுமார் 26 பவுன் நகைகளையும் , புதிய காரையும் பறிமுதல் செய்த போலீஸார் , இவரையும் , திருட்டுக்கு உடந்தையாக இருந்த மனைவி பிரபாவதியையும் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையிலடைத்திருக்கின்றனர். மேலும் , இவர்களின் 10 வயதுக்கு உட்பட்ட இரு பிள்ளைகளையும் மீட்டு விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாத்தா , பாட்டியிடம் ஒப்படைக்கவும் போலீஸார் அனுப்பி வைத்தனர்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks