Chennai to Tirupati in 90 Mins: இனி திருப்பதி போக 1.5 மணி நேரம் போதும்! பாடி - திருநின்றவூர் ரூட்டில் பறக்கப்போகும் மாஸ் மேம்பாலம்!

Chennai to Tirupati in 90 Mins: இனி திருப்பதி போக 1.5 மணி நேரம் போதும்! பாடி - திருநின்றவூர் ரூட்டில் பறக்கப்போகும் மாஸ் மேம்பாலம்!
News Image
<p style="text-align: justify;"><span style="color: #ba372a;"><strong>Chennai Tirupati Elevated Road</strong>:</span> சென்னையிலிருந்து ஆன்மீக நகரமான திருப்பதிக்குச் செல்லும் பக்தர்களுக்கும், வடமேற்கு புறநகர்ப் பகுதி மக்களுக்கும் ஒரு மிகப்பெரிய நற்செய்தி வெளியாகியுள்ளது. சென்னை பாடி மேம்பாலத்திலிருந்து திருநின்றவூர் வரையிலான சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் 4 முதல் 6 வழிகள் கொண்ட மிகநீளமான உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் முழுமையாகச் பயன்பாட்டிற்கு வரும்போது, சென்னையிலிருந்து திருப்பதி செல்வதற்கான பயண நேரம் மூன்று மணி நேரத்திலிருந்து பாதியாகக் குறைந்து, வெறும் ஒன்றரை மணி நேரத்தில் சென்றுவிட முடியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.</p> <h3 style="text-align: justify;">13 ஆண்டு கால காத்திருப்பிற்கு விடிவு</h3> <p style="text-align: justify;">பாடி முதல் திருநின்றவூர் வரையிலான 22 கிலோமீட்டர் சாலைப் பகுதியை அகலப்படுத்தும் திட்டமானது, நில எடுப்புக்கு ஏற்பட்ட கடும் எதிர்ப்புகள் காரணமாக கடந்த 2012-ஆம் ஆண்டில் கைவிடப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமிருந்து மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுன் இந்த உயர்மட்ட சாலைத் திட்டத்தைக் சட்டப்பேரவையில் அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம், பாடியிலிருந்து திருநின்றவூர் வரை கடக்க ஆகும் 90 நிமிடப் பயணம், இனி வெறும் 25 நிமிடங்களாகச் சுருங்கும்.</p> <h3 style="text-align: justify;">போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி</h3> <p style="text-align: justify;">தற்போது 45 முதல் 50 அடி அகலம் மட்டுமே கொண்ட இந்தச் சாலையில் நாள்தோறும் சுமார் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. குறிப்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் ஓடுதளம், ஆவடி, பட்டாபிராம் ஆகிய முக்கியச் சந்திப்புகளில் உச்சக்கட்ட நேரங்களில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதற்காக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பல சிறு மேம்பாலத் திட்டங்களுக்குப் பதிலாக, இந்த ஒரே பெரிய உயர்மட்ட சாலைத் திட்டம் மாற்றுத் தீர்வாக முன்வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாகச் சாலையை 80 முதல் 90 அடி வரை அகலப்படுத்தி, அதன்பின்னரே மேம்பாலக் கட்டுமானப் பணிகளைத் தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.</p> <h3 style="text-align: justify;">விரைவில் முழுமையடையும் நெடுஞ்சாலைப் பணிகள்</h3> <p style="text-align: justify;">இதற்கிடையே, திருநின்றவூர் முதல் திருவள்ளூர் வரையிலான 18 கிலோமீட்டர் தொலைவு கொண்ட 4 வழிச் சாலைப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்து திறக்கப்பட்டுவிட்டன. மேலும், திருவள்ளூரிலிருந்து தமிழக-ஆந்திர எல்லை வரையிலான 44 கிலோமீட்டர் தூரத்திற்கான அணுகல் கட்டுப்படுத்தப்பட்ட நான்கு வழிச் சாலைப் பணிகள் தற்போது 30 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இப்பணிகள் அனைத்தும் முடிவடையும் என்பதால், எதிர்காலத்தில் சென்னை வாழ் மக்களுக்குத் திருப்பதி பயணம் மிகவும் எளிதாகவும் விரைவாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks