தேவகோட்டை அஞ்சலகத்தில் மாணவர்களுக்கு நேரடி அஞ்சல் துறை அனுபவம்!

தேவகோட்டை அஞ்சலகத்தில் மாணவர்களுக்கு நேரடி அஞ்சல் துறை அனுபவம்!
News Image
<p>அஞ்சலக செயல்பாடுகளை நேரில் அறிந்த மாணவர்கள் தேவகோட்டை தலைமை அஞ்சலகத்தில் சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்களின் களப்பயணம்.</p> <p><strong>தேவகோட்டை தலைமை தபால் அதிகாரி வீரபாண்டியன் மாணவர்களை வரவேற்றார்.</strong></p> <p>தேவகோட்டை: தேவகோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணம் மேற்கொண்டு, அஞ்சல் துறையின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு சேவைகள் குறித்து நேரில் அறிந்து கொண்டனர். பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்களப்பயணத்தில் மாணவர்கள் பங்கேற்றனர். தேவகோட்டை தலைமை தபால் அதிகாரி வீரபாண்டியன் மாணவர்களை வரவேற்றார்.</p> <p><strong>அஞ்சலகத் துறையின் செயல்பாடுகள்</strong></p> <p>அஞ்சலகத் துறையின் செயல்பாடுகள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகள், அஞ்சல் அனுப்பும் நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து அஞ்சலக உதவி அதிகாரி செல்வராஜ் மற்றும் அஞ்சலக அலுவலர்கள் மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, மாணவர்களிடம் அஞ்சல் துறை தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகளுக்கு சரியான பதில்களை அளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் மாணவர்கள் அஞ்சலக சேவைகள் குறித்து ஆர்வத்துடன் அறிந்து கொண்டனர். களப்பயணத்திற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் ஆர்த்தி, சிவரஞ்சனி மற்றும் ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் செய்திருந்தனர்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks