ஓணம் பண்டிகை: கேரளா விமானக் கட்டணம் கடும் உயர்வு! பயணிகள் அதிர்ச்சி!

ஓணம் பண்டிகை: கேரளா விமானக் கட்டணம் கடும் உயர்வு! பயணிகள் அதிர்ச்சி!
News Image
<p style="text-align: justify;">ஓணம் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக, விமானம் மூலம் அதிக அளவில் மக்கள் கேரளா செல்வதால் கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.கேரளம் மாநிலத்தில் 10 நாட்கள் ஓணம் பண்டிகை கடந்த 16-ம் தேதி முதல் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. முக்கிய நாளான திருவோணம் ஆக.26-ல் கொண்டாடப்படுகிறது.&nbsp; கேரளாவின் பாரம்பரிய மற்றும் அறுவடைத் திருவிழாவான ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் வாழும்&nbsp; கேரள&nbsp; மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல தீவிரமாகத் திட்டமிட்டு வருகின்றனர்.&nbsp;</p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/23/f277f71f043e40bc78f16c664d9152c11787494720299193_original.JPG" /></p> <p style="text-align: justify;">இதன் காரணமாகத் தென் மாநிலங்களில் இருந்து கேரளா செல்லும் ரயில், பேருந்து மற்றும் விமான போக்குவரத்துச் சேவைகளில் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு இடங்கள் ஏற்கனவே முழுமையாக நிரம்பிவிட்டதால், கடைசி நேரப் பயணத்திற்கு மக்கள் பெருமளவில் விமான சேவையை நாடத் தொடங்கியுள்ளனர்.</p> <p style="text-align: justify;">இதைப் பயன்படுத்தி விமான நிறுவனங்கள் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியுள்ளன. சென்னையில் இருந்து கேரளாவின் முக்கிய நகரங்களான கொச்சி மற்றும் திருவனந்தபுரத்திற்கு செல்லும் விமானங்களின்&nbsp; வழக்கமாக சென்னை - கொச்சி இடையே இயக்கப்படும் விமானங்களின் கட்டணம் சராசரியாக ரூ.5,336 ஆக இருக்கும் நிலையில், ஓணம் பண்டிகை நெருங்கியதை ஒட்டி தற்சமயம் ஒரே நாளில் ரூ.14,843 வரை உயர்ந்துள்ளது.</p> <p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/23/375ddeb583fe8f17d706d9806e25a46c1787494699315193_original.JPG" /></p> <p style="text-align: justify;">அதேபோல், சென்னை - திருவனந்தபுரம் இடையேயான சாதாரண விமானக் கட்டணம் ரூ.5,853 ஆக உள்ள நிலையில், தற்போதைய பயணிகள் நெருக்கடியால் இதன் கட்டணம் ரூ.14,700 ஆக உச்சத்தை தொட்டுள்ளது. திடீரென விமானக் கட்டணம் 2 முதல் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதால் சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்ட பயணிகள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். கட்டண உயர்வு அதிகமாக இருந்தாலும், குடும்பத்துடன் பண்டிகையைக் கொண்டாட வேறு வழியின்றி கூடுதல் தொகையைக் கொடுத்துப் பயணிப்பதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர். பண்டிகைக் காலங்களில் இதுபோன்ற செயற்கையான கட்டண உயர்வுகளைக் கட்டுப்படுத்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகமும், மாநில அரசுகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.</p> <p style="text-align: justify;">விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும், ஓணம் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் இருந்து கேரளம் மாநிலத்துக்கு கூடுதல் - விமான சேவைகளை இயக்க வேண்டும் என்று கேரளம் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks