பள்ளியில் மாணவிக்கு பாலியல் அத்துமீறல் !! ஆசிரியருக்கு உடந்தையாக செயல்பட்ட ஆசிரியை கைது

பள்ளியில் மாணவிக்கு பாலியல் அத்துமீறல் !! ஆசிரியருக்கு உடந்தையாக செயல்பட்ட ஆசிரியை கைது
News Image
<h2 dir="ltr">"உன் அந்தரங்க போட்டோக்களை அனுப்பு"</h2> <p dir="ltr">தஞ்சாவூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பயின்றி வரும் மாணவி ஒருவருக்கு , அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சண்முக சுந்தரராஜ் என்பவர் செல்போன் மூலம் தொடர்ந்து " உன் அந்தரங்க போட்டோக்களை அனுப்பு " பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் ஆசிரியர் என்பதால் அச்சமடைந்த மாணவி , இது குறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.</p> <p>ஆனால், ஆசிரியரின் தொல்லை நாளுக்கு நாள் எல்லை மீறியதாகவும் , பள்ளியில் நேரடியாக பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி , நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் கண்ணீர் மல்க தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.</p> <h2><strong>மாணவி புகார் - போக்சோவில் கைது</strong></h2> <p>இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் , உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவியின் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதுடன் , ஆசிரியர் சண்முக சுந்தரராஜை போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.</p> <p>அப்போது , இந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சண்முக சுந்தரராஜ் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்தது , அதே பள்ளியில் பணியாற்றும் திவ்யா என்ற ஆசிரியைக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததாகவும் , இருப்பினும் அவர் இதைத் தடுக்காமல் சண்முக சுந்தரராஜுக்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.</p> <h2><strong>மாணவிக்கு எத்தனை காலம் தொந்தரவு ?</strong></h2> <p>இதையடுத்து மாணவிக்கு நடந்ததாக கூறப்படும் பாலியல் தொந்தரவு சம்பவத்தை மறைக்க முயன்றதாகவும் , ஆசிரியருக்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படும் திவ்யாவையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.</p> <p>மேலும் , இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா , மாணவிக்கு எவ்வளவு காலமாக தொந்தரவு அளிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p> <p>மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில் , அவருக்கு உடந்தையாக இருந்ததாக மற்றொரு ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks