அண்ணன் மகளை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த சித்தப்பா !!

அண்ணன் மகளை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த சித்தப்பா !!
News Image
<h2><strong>"ஆசை வார்த்தை கூறி சிறுமி பலாத்காரம்"</strong></h2> <p>ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த சரவணன் ( வயது 44 ) என்பவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது அண்ணன் மகளான பிளஸ் 2 படித்து வந்த 17 வயது சிறுமி , அவ்வப்போது சித்தப்பாவின் மகன்களை பார்த்து கொள்ள வீட்டுக்கு வந்து செல்வார்.</p> <p>கடந்த 2022 - ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி சரவணன் வீட்டிற்கு வந்த போது , சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து கடந்த 2023 - ம் ஆண்டு ஜனவரி மாதம் 1 - ம் தேதியும் அந்த பெண்ணை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இதனால் சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.</p> <h2><strong>வழக்கு பதிவு செய்து கைது</strong></h2> <p>இது குறித்து பவானி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் , சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சரவணன் கைது செய்யப்பட்டார். அவரை சிறையில் அடைத்து இது குறித்து ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.</p> <p>இந்நிலையில், வழக்கில் இறுதி விசாரணை நடத்தி ஈரோடு மகிளா நீதிமன்ற நீதிபதி சொர்ணகுமார் தீர்ப்பளித்தார். அதில் குற்றவாளியான சரவணனுக்கு ஆயுள் தண்டனையும் , ரூ.5 ஆயிரம் அபராதமும் , அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என கூறினார்.</p> <p>மேலும், பாலியல் குற்றத்தால் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண தொகையாக ரூ.3 லட்சத்து 85 ஆயிரத்தை வழங்கிட தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி சொர்ணகுமார் பரிந்துரைத்தார்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks