
<p style="text-align: justify;">தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II மற்றும் IIA பணிகள்) அறிவிப்பு கடந்த 11.08.2026 அன்று வெளியிடப்பட்டது. இதில் தொகுதி-II பிரிவில் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-II உள்ளிட்ட 41 காலிப்பணியிடங்களும், தொகுதி-IIA பிரிவில் முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட இடங்களும் என மொத்தம் 780 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p>
<h3 style="text-align: justify;">நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் நாள்</h3>
<p style="text-align: justify;">இத்தேர்விற்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த போட்டித் தேர்வாளர்கள் பயனடையும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலforeignநெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக, வரும் 19.08.2026 (புதன்கிழமை) முதல் இந்த நேரடி பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன.</p>
<h3 style="text-align: justify;">பயிற்சி வகுப்பில் சேர வேண்டிய வழிமுறைகள்.</h3>
<p style="text-align: justify;">இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்தெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிய 044-27237124 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தேர்வர்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p>
Source: Read Full Article