
<p>தவெகவுடன் திமுக போல எதற்கெடுத்தாலும் சண்டை போட மாட்டோம். அவர்கள் எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக அணுகுவோம்: மதுரையில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி.</p>
<p><strong>தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி.</strong></p>
<p>மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான முன்னேற்பாடு பணிகளை துரிதமாக கவனமுடன் செய்ய வேண்டும். தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி. தொடர்ந்து அவர் கூறுகையில்.."செப்டம்பர் 17ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் முழுமையாக நடைபெறுவதாக தெரியவில்லை. கோயில் கும்பாபிஷேகத்திற்கான முன்னேற்பாடு பணிகளை துரிதமாக கவனமுடன் செய்ய வேண்டும். புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆட்சியாளர்கள் அமைச்சர்கள் இங்கே அமர்ந்து பணிகளை உற்று கவனிக்க வேண்டும். இதை எங்களை போன்ற ஆட்கள் சுட்டிக்காட்டினால் அதை திருத்திக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் நாங்கள் உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுவது பகையால் அல்ல பக்தியால்தான் என்றார்.</p>
<p><strong>தூய்மையான நகரமாக மாற்ற வேண்டும்</strong></p>
<p>ஆன்மீக நகரமான மதுரையை தூய்மையான நகரமாக மாற்ற வேண்டும். மதுரை மாநகர் குப்பை மாநகராக உள்ளது குப்பையில் கூட ஊழல் செய்கிறார்கள். மீனாட்சி அம்மன் அருளால் தான் நீங்கள் புதிதாக ஆட்சி அமைத்துள்ளீர்கள் எனவே கோயில் கும்பாபிஷேக பணியை கவனமுடன் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றார். வைகை ஆற்றின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் முயற்சிகளை அரசு செய்ய வேண்டும் எனக்கூறினார். தொகுதி மறுவரையில் அரசியல் செய்யாதீர்கள் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மூலம் தான் அவர்களுடைய வாய்ப்பை உறுதி செய்ய முடியும். பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காகவாவது தொகுதி மறு வரை நிச்சயம் வேண்டும் என்றார்.</p>
<p> தமிழர்களின் மாநில உரிமைகளை பாஜக ஒரு நாளும் விட்டு தராது. காவேரியும் வேண்டும் தொகுதி மறுவரையும் வேண்டும் <br />பெண்களுக்கான இட ஒதுக்கீடு வேண்டும் </p>
<p>தவெகவுடன் திமுக போல எதற்கெடுத்தாலும் சண்டை போட மாட்டோம் அவர்கள் எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக அணுகுவோம்</p>
<p><a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> எப்படி எங்களை அணுகுகிறார்களோ அதுபோல தான் நாங்கள் அவர்களை கையாள்வோம் என்றார்.</p>
Source: Read Full Article