
<p><span dir="auto">அமெரிக்காவுடனான போர் ஈரானின் பொருளாதாரத்தைப் பாதித்து வருகிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, இந்த சிக்கல்களுக்குத் தீர்வு காணுமாறு அந்நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் தடைகள் மற்றும் முற்றுகைகள் காரணமாக, வெளிநாட்டு வர்த்தகம் 35 சதவீதம் சரிந்துள்ளதாக ஈரானிய அதிபர் தெரிவித்தார்.</span></p>
<p><span dir="auto">ஈரான்-அமெரிக்க போர் தொடங்கி 6 மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால், பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை. இந்த சூழலில், ஈரானை பொருளாதார ரீதியாக தண்டிப்பதற்கான தனது முயற்சிகளை ட்ரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்கா இதனை "பொருளாதார டி-டே" என்று குறிப்பிடுகிறது.</span></p>
<h2><span dir="auto">எகிப்து வங்கி, ஹாங்காங் நிறுவனத்திற்கு அமெரிக்கா விதித்த தடை</span></h2>
<div class="mid-taboola">
<p id="taboola-mid-article-personalisation-3181485" class="trc_related_container tbl-trecs-container trc_spotlight_widget"><span dir="auto">அமெரிக்க கருவூலத் துறை , எகிப்தின் பேங்க் மிஸ்ர் வங்கி </span>டெஹ்ரானுடன் வர்த்தகம் மேற்கொள்வதற்கு தடைகளை விதித்துள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அவ்வங்கியின் கிளைகள், டாலரில் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை தடுக்கும் ஒரு விதியையும் அது முன்மொழிந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாகத் தாங்களும், வெளியுறவு அமைச்சகமும் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக எகிப்தின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. </p>
</div>
<p><span dir="auto">அமெரிக்க கருவூலத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பின்படி, ஈரானின் பேங்க் மெல்லியுடன் தொடர்புடைய ஒரு ஹாங்காங் நிறுவனம் மற்றும் ஒரு தனிநபர் மீது அதிகாரிகள் தனித்தனியாக தடைகளை விதித்துள்ளனர். இந்த தடைச் சுற்று, ஈரானின் பொருளாதாரத்தின் மீதான போரின் தாக்கத்தை மேலும் மோசமாக்குகிறது. அங்கு, கடந்த மாதம், ஆண்டு பணவீக்கம் 66 சதவீதத்தை எட்டியது.</span></p>
<h2><span dir="auto">மொஜ்தபா கமெனி கூறியது என்ன.?</span></h2>
<p><span dir="auto">பொருளாதாரச் சிக்கல்களை கையாளுமாறு அரசாங்கத்தை ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி வலியுறுத்தியுள்ளார். "பணவீக்கம், வேலையின்மை, விலை மேலாண்மை, பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான சந்தை போன்ற தொடர்ச்சியான பொருளாதார மற்றும் வாழ்வாதாரச் சவால்களுக்கு தீவிரமாகத் தீர்வு காணப்பட வேண்டும்," என்று கமெனியின் பெயரில் வெளியிடப்பட்ட ஒரு எழுத்துப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</span></p>
<h2><span dir="auto">அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கூறியது என்ன.?</span></h2>
<p><span dir="auto">அமெரிக்காவின் தடைகள் மற்றும் ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை காரணமாக, ஈரானின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சுமார் 35 சதவீதம் குறைந்துள்ளதாக, ஈரானிய அதிபர் மசூத் பெஷெஷ்கியன், அரசு ஊடகங்களிடம் தெரிவித்தார். ஜூன் மாதம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு குறுகிய கால ஒப்பந்தத்தின் கீழ், வாஷிங்டன் ஈரானை எண்ணெய் விற்க அனுமதித்ததால், ஈரான் சுமார் 90 மில்லியன் பீப்பாய் எண்ணெயை விற்க முடிந்தது என்றும் அவர் கூறினார்.</span></p>
<p><span dir="auto">கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி, கடந்த வியாழக்கிழமை டெஹ்ரானில் ஈரானியத் தலைவர்களை சந்தித்தார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக, போருக்கு முந்தைய தடையற்ற கப்பல் போக்குவரத்து நிலைக்குத் திரும்புவதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தியதாக அந்த சந்திப்பின்போது அவர் கூறினார்.</span></p>
<p> </p>
<p><span dir="auto"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/you-can-get-these-health-benefits-by-eating-5-almonds-every-day-272882" width="631" height="381" scrolling="no"></iframe></span></p>
Source: Read Full Article