15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி

15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
News Image
<h2 dir="ltr"><strong>" பேத்தியை காணவில்லை - தாத்தா புகார் "</strong></h2> <p dir="ltr">திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் தாய் - தந்தையை இழந்த நிலையில் தாத்தா - பாட்டி வளர்ப்பில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 19 ம் தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென்று காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாத்தா தனது பேத்தியை காணவில்லை என எடையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியை தேடி வந்துள்ளனர்.</p> <p>இறுதியாக போலீசார் பத்து நாட்களுக்கு பிறகு சிறுமியை கண்டறிந்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. இதில் சிறுமிக்கு குரும்பல் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விமல்ராஜ் ( வயது 24 ) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திய விமல்ராஜ் , சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்து சென்று பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.</p> <h2><strong>4 பேர் சிறுமிக்கு பாலியல் தொல்லை</strong></h2> <p>தொடர் பாலியல் வன்கொடுமையின் காரணமாக சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இந்த நிலையில் அங்கு வார்டு பாயாக பணி புரிந்த திருத்துறைப்பூண்டியை சேர்ந்த முத்துக்குமரன் ( வயது 39 ) என்ற இளைஞருடனும் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.</p> <p>இந்த பழக்கத்தை பயன்படுத்தி சிறுமியிடம் அவரும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். பின்னர், மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவாக பணிபுரிந்த விஜய் என்பவர் விவரங்களை அறிந்து உதவி செய்வதாக கூறி சிறுமியிடம் ஆதரவாக பேசியுள்ளார். பின்னர், இவரும் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.</p> <h2><strong>3 பேர் கைது - ஒருவர் தலைமறைவு</strong></h2> <p>இதனையடுத்து, இந்த விவரங்களை எல்லாம் அறிந்த திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாண்டி பகுதியை சேர்ந்த சங்கரய்யா ( வயது 24) என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருப்பூருக்கு அழைத்து சென்று பல முறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.</p> <p>இது குறித்த விஷயங்களை அறிந்த எடையூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விமல்ராஜ் , முத்துக் குமரன், சங்கரய்யா ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் தலை மறைவான ஆம்புலன்ஸ் டிரைவர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>யை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், 15 வயது சிறுமிக்கு தொடர்ந்து 4 பேர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks