
<p>விழுப்புரம் அருகே கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். </p>
<h2><strong>உடனுக்குடன் ஆக்‌ஷன் எடுக்கும் தவெக</strong></h2>
<p>தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். இப்படியான நிலையில் கடந்த திமுக, அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் தீர்க்கப்படாமல் இருந்த சிறு சிறு பிரச்னைகள் யாவும் உடனடியாக தீர்க்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. </p>
<p>மக்கள் வீடியோ, சமூக வலைத்தளப் பதிவு, நேரில் முதலமைச்சர் பிரிவில் மனு மூலமாக தங்கள் குறைகளை உடனடியாக தெரிவிக்க அதுதொடர்பான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. </p>
<p><iframe title="Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்" src="https://www.youtube.com/embed/9_OsS17Ut6c" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2><strong>5 ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறை</strong></h2>
<p>இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் உள்ள சிறுநாவூர் கிராம மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதன் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளான நேற்று காலி குடங்களுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கிராம மக்கள் குடிநீருக்காக பல கிலோமீட்டர் தூரம் சென்று வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். </p>
<p>இதுதொடர்பாக 5 ஆண்டுகளாக புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர். அப்படியே வந்தாலும் இரண்டு குடம் தான் கிடைக்கிறது. இதனை வைத்து எப்படி குடும்பத்தின் தேவையை தீர்க்க முடியும் என கேள்வியெழுப்பியுள்ளனர். </p>
<h2><strong>நடவடிக்கை எடுக்காமலேயே சரி செய்ததாக விளக்கம்</strong></h2>
<p>சிறுநாவூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுதொடர்பாக சொல்லியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தனர். தங்கள் கிராமத்தில் இருக்கும் கிணறு சிறியதாக இருப்பதாகவும், அதில் தண்ணீர் வரத்து இல்லை. இதனால் மற்றொரு இடத்தில் கிணறு தோண்டி விட்டாலும் குடிநீர் இணைப்பு இதுவரை கொடுக்கவில்லை. அந்த இணைப்பு கொடுத்தால் எங்களுக்கு நிச்சயம் தண்ணீர் வரும். அதை அதிகாரிகள் செய்ய மறுக்கிறார்கள் எனவும் கூறியுள்ளனர். </p>
<p><strong>Also Read: <a title="Jananayagan: ஜனநாயகன் படத்தை தப்பா சொல்லணும்.. திமுக தரப்பில் பணப்பேரம்?.. வெளியான ஸ்க்ரீன்ஷாட்!" href="https://tamil.abplive.com/entertainment/dmk-gen-z-page-approach-some-influencers-regarding-given-fake-reviews-for-cm-joseph-vijay-jananayagan-movie-267162" target="_blank" rel="noopener">Jananayagan: ஜனநாயகன் படத்தை தப்பா சொல்லணும்.. திமுக தரப்பில் பணப்பேரம்?.. வெளியான ஸ்க்ரீன்ஷாட்!</a></strong></p>
<p>தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது என அதிகாரிகளுக்கு நன்றாக தெரியும். இதுகுறித்து ஆன்லைன் வழியாக பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் அளித்தும், எதன் மீது நடவடிக்கை எடுக்காமல் குறை தீர்க்கப்பட்டது என தெரிவிக்கிறார்கள். வருவார் ஆய்வாளர் உள்ளிட்டோர் வந்து பார்வையிட்டு 2 மாதத்தில் பிரச்னையை சரி செய்து தருகிறார்கள். ஆனால் கொடுக்கவே இல்லை. பஞ்சாயத்து தலைவர் எங்கள் கிராமத்திற்கு வருவதே இல்லை. நாங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு போகிறோம் என சொன்னவுடன் போகக்கூடாது என வழி மறிக்கிறார்கள். </p>
<p>சிறுநாவூர் கிராமத்தில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. நூலகம், சமுதாயக்கூடம், சாலை என எதுவும் இல்லை. சண்டை காரணமாக அந்த கிராமத்தில் கோயில் திருவிழா நடந்து 20 ஆண்டுகள் ஆகிறது. அங்குள்ள மக்களை சிலர் பிளவுப்படுத்த முயற்சிக்கிறார்கள் என புகாரளிக்க வந்த மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு, உள்ளாட்சி நிர்வாகமும் தலையீட்டு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/health-tips-what-happens-if-you-eat-ghee-smeared-roti-267333" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article