US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்

US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
News Image
<p><span dir="auto">அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. சமீபத்திய அமெரிக்க தாக்குதல்களால், பொதுமக்கள் உயிரிழந்ததாக டெஹ்ரான் தெரிவித்துள்ள நிலையில், அதிகரித்து வரும் பாதுகாப்பு நெருக்கடிக்கு வளைகுடா நாடுகள் பதிலளித்து வருகின்றன. ஈரானின் சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, கடந்த இரண்டு நாட்களில் நடந்த அமெரிக்க தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டும், 78 பேர் காயமடைந்தும் உள்ளனர். அதே வேளையில், ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் ஒரு பரந்த பிராந்திய மோதல் குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளன.</span></p> <h2><span dir="auto">அமெரிக்க வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்ததாக கூறும் ஈரான்</span></h2> <p><span dir="auto">மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள பல இடங்கள் உட்பட, 5 மாகாணங்களை அமெரிக்கா குறிவைத்து தாக்குதல்கள் நடத்தியதாக ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.</span></p> <p><span dir="auto">மேலும், இந்த தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டதாகவும், 78 பேர் காயமடைந்ததாகவும் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹொசைன் கெர்மன்பூர்&nbsp;</span><span dir="auto">அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் 47 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மீதமுள்ளவர்கள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</span></p> <p><span dir="auto">புஷேர், சபாஹர், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் உள்ளிட்ட பல நகரங்களில் இந்த தாக்குதல்கள் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</span></p> <p><span dir="auto">ஈரானின் செயல்பாட்டில் உள்ள ஒரே அணுமின் நிலையம் அமைந்துள்ள புஷேரும், குண்டு வெடிப்புச் சம்பவங்கள் பதிவான இடங்களில் ஒன்றாகும். வாஷிங்டனுக்கும் டெஹ்ரானுக்கும் இடையிலான பகைமை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த சம்பவம் அணுசக்தி உள்கட்டமைப்பின் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.</span></p> <h2><span dir="auto">அமெரிக்க சொத்துக்களை ஈரான் குறிவைத்ததால் நாடு தழுவிய எச்சரிக்கையை விடுத்துள்ள பஹ்ரைன்</span></h2> <p><span dir="auto">இந்நிலையில், ஈரானின் பதிலடித் தாக்குதலுக்கு எதிர்வினையாக, பஹ்ரைன், நாடு தழுவிய அவசரகால நடவடிக்கைகளை செயல்படுத்தியதைத் தொடர்ந்து, வளைகுடா முழுவதும் மோதல் மேலும் பரவி, பதற்றம் ஏற்பட்டுள்ளது.</span></p> <p><span dir="auto">எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், பொதுமக்கள் உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பஹ்ரைனின் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.&nbsp;</span><span dir="auto">"குடிமக்களும் குடியிருப்பாளர்களும் அமைதியாக இருந்து, அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு" அமைச்சகம் தெரிவித்துள்ளது.</span></p> <p><span dir="auto">பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் மூலோபாய சொத்துக்கள் மீது, ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதற்கு ஈரான் ராணுவம் பொறுப்பேற்றது.</span></p> <p><span dir="auto">ஈரானின் கூற்றுக்களின்படி, குவைத்தில் உள்ள பேட்ரியாட் ஏவுகணை அமைப்பு, கத்தாரில் உள்ள முன் எச்சரிக்கை செயற்கைக்கோள் ஆண்டெனா மற்றும் பஹ்ரைனில் அமெரிக்க ராணுவம் பயன்படுத்தும் எரிபொருள் சேமிப்பு வசதிகள் ஆகியவை தாக்கப்பட்ட இலக்குகளில் அடங்கும்.</span></p> <h3><span dir="auto">போர்நிறுத்த முறிவு புதிய ராணுவப் பரிமாற்றத்தைத் தூண்டுகிறது</span></h3> <p><span dir="auto">இரு நாடுகளுக்கும் இடையே, பாகிஸ்தான் மத்தியஸ்தத்திலான போர் நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து, மீண்டும் சண்டை மூண்டுள்ளது.&nbsp;</span><span dir="auto">இரு தரப்பினராலும் தெரிவிக்கப்படும் தகவல்களின்படி, ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, போர் நிறுத்தம் முறிந்தது. இதற்கு பதிலடியாக, அமெரிக்கா, சாபஹார், இரான்ஷாஹர் மற்றும் புஷேர் ஆகிய இடங்களில் உள்ள தளங்களை குறிவைத்து புதிய தாக்குதல்களைத் தொடுத்தது.</span></p> <p><span dir="auto">இதையடுத்து ஈரான், பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படைத் தலைமையகம் மற்றும் குவைத்தில் உள்ள அரிஃப்ஜான், அலி அல் சலேம் ஆகிய இடங்களில் உள்ள தளங்கள் உட்பட, வளைகுடா முழுவதும் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து பதிலடி கொடுத்தது.</span></p> <p><span dir="auto">மேலும், அமெரிக்க ராணுவ நடவடிக்கை, பிராந்தியத்தின் பிற பகுதிகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது கூடுதல் தாக்குதல்களை தூண்டக்கூடும் என்று ஈரான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</span></p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p> <p><span dir="auto"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/gk/know-why-mosquitoes-bite-some-people-more-scientific-reason-blood-group-o-carbon-dioxide-factors-266689" width="631" height="381" scrolling="no"></iframe></span></p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks