
<p>தமிழ்நாட்டில் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> ஆட்சி அமைந்தது முதலே <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒப்பந்தங்களில் பல முறைகேடுகள் கடந்த ஆட்சியில் நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஏராளமான டெண்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளது. </p>
<p>இந்த சூழலில், காவலர் நியமனத்தையும் ஓராண்டுக்கு ஒத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், </p>
<h2><strong>கண்டனம்:</strong></h2>
<p>தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தது முதலே குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், முன்பை விட கூடுதலாக தற்போது காவலர்கள் தேவைப்படுகிறார்கள். </p>
<p>ஆனால் நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.</p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தது முதலே குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், முன்பை விட கூடுதலாக தற்போது காவலர்கள் தேவைப்படுகிறார்கள். <br /><br />ஆனால் நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.<br /><br />சீருடைப்பணியாளர்…</p>
— Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2078087494961430824?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote>
<p>
<script src="https://platform.x.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<h2>இளைஞர்கள் ஏமாற்றம்: </h2>
<p>சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பின்படி அடுத்த ஆண்டுதான் காவலர்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. இது, காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. </p>
<p>இதன் மூலம், ஏற்கெனவே சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கையும், காவல்துறை பணியின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தையும் ஒருசேர கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த அரசு. </p>
<h2><strong>உடனடி நியமனம்:</strong></h2>
<p>எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டிருக்கும் அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர்களை நியமிப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டுமென்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்.</p>
<p>இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/what-successful-people-do-on-sundays-267900" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article