
<h2>தொடரும் சிறை மரணங்கள்</h2>
<p>தமிழகத்தில் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> ஆட்சி அமைந்த நிலையில், அடுத்தடுத்து லாக்அப் மரணங்கள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த வகையில் கடந்த ஜூலை 13 ஆம் தேதி மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் மர்ம்மான முறையில் இறந்த நிலையில், தற்போது பல்வேறு திருப்பங்கள் CBCID விசாரணையில் அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன், தனது வீட்டு வாசலில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.</p>
<p>அந்த கடையில் மளிகை பொருட்களுடன் புகையிலை, குட்கா போன்றவற்றை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சபரிவர்மனை போலீசார் கைது செய்த நிலையில், கடந்த 9 ஆம் தேதி நாகர்கோவிலில் உள்ள கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.அடுத்த 4 நாட்களில் அதாவது ஜூலை 13 ஆம் தேதி காலை சபரிவர்மனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது உறவினர்களுக்கு போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>
<h2>சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயம்</h2>
<p>இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அலறி அடித்து மருத்துவமனைக்கு ஓடி வந்துள்ளனர். மேலும் சபரிவர்மன் உடலை பெற மாட்டோம் என கோரி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சபரிவர்மன் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் சபரிவர்மன் அடித்து கொலை செய்யப்படது உறுதியானது. சபரிவர்மன் உடலில் மொத்தமாக 19 இடங்களில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக தலையில் 2 இடங்களில் பலத்த காயமும், பின்னந்தலை மற்றும் பின்னங்கழுத்து பகுதியிலும் காயங்கள் உள்ளதும் தெரியவந்துள்ளது.</p>
<p>இதே போல கை, கால் மற்றும் இடது நெஞ்சின் கீழ்ப்பகுதியில் 7 செ.மீட்டர் அளவில் காயம் உள்ளதும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக நாகர்கோவில் சிறை தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவகுமார் மற்றும் திருவிடைநம்பி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.</p>
<h2>நாகர்கோவிலில் சிபிசிஐடி விசாரணை</h2>
<p>மேலும் நாகர்கோவிலில் உள்ள கிளைச் சிறை கைதி 8 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது CBCID போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக CBCID உயர் அதிகாரிகள், கைது செய்யப்பட்ட போலீசார், மற்றும் சிறைக்கைதிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதன் படி நாகர்கோவில் சிலையில் அடைக்கப்பட்டிருந்த சபரிவர்மன்,சம்பவம் நடந்த ஜூலை 13 ஆம் தேதி இரவு, சிறையில் இருந்து கத்தியுள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தையை பார்க்க வேண்டும் எனவும், தன்னை விடுவிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் அங்குள்ள மற்ற கைதிகள் சிறை வார்டனிடம் புகார் தெரிவித்த நிலையில், சிறை வார்டன்கள் சபரிவர்மனை தாக்கியுள்ளனர்.</p>
<h3>சபரிவர்மனை அடித்த கைதிகள்</h3>
<p>அடுத்தாக அங்கிருந்த கைதிகளிடம் சபரிவர்மனை தாக்கும்படி தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கைதிகள் சபரி வர்மனின் கைலியை கழட்டி அவரது காலில் கட்டி தாக்கியுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் காலில் கட்டியிருந்த கைலியை சபரிவர்மன் அவிழ்த்த நிலையில், கோபம் அடைந்த கைதிகள் அந்த கைலியை இரண்டாக கிழித்து கை மற்றும் காலில் கட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் தலை, கை, காலில் பலத்த காயம் அடைந்த நிலையில் சபரிவர்மன் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.</p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/planning-to-buy-a-new-car-just-make-sure-you-never-commit-these-9-mistakes-269451" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article