
<h2>தவெகவில் இணையும் அதிமுக எம்எல்ஏக்கள்</h2>
<p>தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்றுள்ள நிலைலில், அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வருகிறார்கள். இதில் அதிமுக எம்எல்ஏக்கள் குதிரை பேரம் மூலம் தவெக அரசு இழுத்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அந்த வகையில் கடந்த வாரம் தவெகவில் இணைந்த கரூர் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறும்போது தங்களை தவெகவில் இணையுமாறு தன்னை அணுகியதாகவும், இதனையடுத்தே <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a>வில் இணைந்துள்ளதாக கூறினார்.</p>
<p>இந்த பேச்சு குதிரை பேரமாக இருப்பதாக எதிர்கட்சிகள் சார்பாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆதாரத்தோடு தமிழக ஆளுநரை திமுக நிர்வாகிகள் சந்தித்து புகார் அளித்தனர். இதனையடுத்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,</p>
<h2>விஜய் மீது குதிரை பேர புகார்</h2>
<p>குதிரை பேரத்தில் முதலமைச்சர் விஜய் ஈடுபட்டார் என்பதற்கு கடந்த 4ஆம் தேதி ஆளுநரை சந்தித்து புகார் கொடுத்தோம். அந்த புகாரில் வைகோவின் பேச்சை வைத்து புகார் கொடுத்துள்ளோம். அதேபோல், தற்போது எம் ஆர் விஜய்பாஸ்கர் வெளிப்படையாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருக்கிறார். இவையெல்லாம் குதிரை பேர ஊழலுக்கு தகுந்த ஆதாரங்கள் என சுட்டிக்காட்டும் வகையில் திமுக சார்பில் ஆளுநர் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். </p>
<p>குதிரை பேர விவகாரத்தில் தமிழக ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு உண்மைக்கு மாறாகவும் கரூர் வழக்கை பாதிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது என்பதை தெளிவாக சிபிஐயிடமும், கருர் வழக்கை கண்காணிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி இடமும் மனு கொடுத்துள்ளதாக தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் உண்மைக்கு மாறாகத்தான் பேசி வருகிறார். கொளத்தூரில் கொத்து பரோட்டா என விஜய் கீழ்த்தரமாக பேசியுள்ளார். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக பதில் சொல்லி இருக்கிறார். நாங்கள் சாப்பிட்டு போட்டு எச்சை இலை என பேசி இருக்கிறார். </p>
<h3>கரு நாகத்தை விட்டு விட்டோம்</h3>
<p><a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> கீழ்த்தரமாக பேசினால், இனி நாங்களும் இப்படி பேச வேண்டி வரும். இனிமேல் கூட்டணியில் இருந்த கட்சி தலைவர்கள் குறித்து பேச வேண்டாம். இதற்கு பதில் சொல்லும்போது முக்கியமான பிரச்சனைகள் பேசப்படாமல், திசை திரும்பி விடுகிறது. இப்படித்தான் கடந்த தேர்தலின் போது செத்த பாம்பை அடித்து விட்டு, கரு நாகத்தை விட்டு விட்டோம். அந்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/a-great-way-to-get-relief-from-cockroach-problems-in-the-kitchen-267170" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<p> </p>
Source: Read Full Article