
<p>நான்கு வழிச்சாலைக்காக நிலம் வழங்கி இழப்பீடு பெறாதவர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஒ.சுகபுத்ரா, தகவல்.</p>
<p><strong>சிறப்பு முகாம் கிராம நிர்வாக அலுவலங்களில் நடைபெற உள்ளது.</strong></p>
<p>விருதுநகர் மாவட்டம் வடுகபட்டி – தெற்குவெங்காநல்லூர் வரை தேசிய நெடுஞ்சாலை - 744 அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குரிய நில உடைமைதாரர்களிடமிருந்து ஆவணங்களை பெற்று கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கும் பொருட்டு நில உடைமைதாரர்களிடமிருந்து நில ஆவணங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் கிராம நிர்வாக அலுவலங்களில் நடைபெற உள்ளது.</p>
<p><strong>குன்னூர் கிராமத்திலும் நடைபெற உள்ளது.</strong></p>
<p>அதனடிப்படையில் , இராஜபாளையம் வட்டத்தில் 15.07.2026 மேலராஜகுலராமன் கிராமத்திலும், 16.07.2026 மேலூர் துரைசாமிபுரம் கிராமத்திலும், 21.07.2026 சமுசிகாபுரம் கிராமத்திலும், 23.07.2026 இளந்திரைகொண்டான் கிராமத்திலும், 28.07.2026 தெற்குவெங்காநல்லூர் கிராமத்திலும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில்<strong> </strong>15.07.2026 அத்திகுளம் செங்குளம் கிராமத்திலும், 21.07.2026 முத்துவெங்கட்ராயபுரம் கிராமத்திலும் 23.07.2026 விழுப்பனூர் கிராமத்திலும், 28.07.2026 குன்னூர் கிராமத்திலும் நடைபெற உள்ளது.</p>
<p><strong>ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெற்றுக் கொள்ளலாம்</strong></p>
<p>மேலும், திருவில்லிபுத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 17.07.2026 அன்று காலை 11.00 மணிக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. ஆகவே, தேசிய நெடுஞ்சாலை – 744 அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான உரிமை குறித்த ஆவணங்களை இதுவரை சமர்ப்பிக்காத நிலஉடைமைதாரர்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.</p>
Source: Read Full Article