
<h2>தமிழகத்தில் தொடரும் லாக்அப் மரணங்கள்</h2>
<p>தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தி தவெக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. அந்த வகையில், முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது. மேலும் லாக் அப் மணரங்களும் நடைபெற்று தமிழக மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.</p>
<p>அந்த வகையில், தவெக அரசு பதவியேற்ற முதல் சில வாரங்களிலேயே நான்கு காவல் மரணங்கள் நடந்ததாக மனித உரிமை அமைப்புகளும் குற்றம்சாட்டி வருகிறது. நாகர்கோவிலை சேர்ந்த சபரிவர்மன் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் குட்கா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட பிறகு நீதிமன்றக் காவலில் இருந்தபோது உயிரிழந்தார். இதில் சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்த்தாக பிரேத பரிசோதனை அறிக்கையில் ஷாக் தகவல் வெளியானது.</p>
<h2> லாக்அப் மரணங்கள்- எதிர்கட்சிகள் கேள்வி</h2>
<p>இந்த சம்பவம் மறைவதற்க்குள் நேற்று முன் தினம் தூத்துக்குடியில் 24 வயதான அருணாச்சலம் என்ற இளைஞர் காவல் நிலையத்தில் உயிரிழந்தார். போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றதாகவும், பின்னர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அருணாச்சலத்தின் தலை மற்றும் நெஞ்சுப்பகுதியில் போலீசார் தாக்கியதால் அவர் உயிரிழந்த்தாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு லாக் அப் மணரங்கள் நடைபெற்றுள்ளதாக எதிர்கட்சிகள் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசை விமர்சித்து வருகிறது. மேலும் முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> இந்த சம்பவத்தில் வாய் திறக்கவில்லையெனவும் குற்றம்சாட்டப்படுகிறது.</p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?<br /><br />எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?<br /><br />Accountability, Apology –… <a href="https://t.co/bAcbn0M5fC">pic.twitter.com/bAcbn0M5fC</a></p>
— M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2080880741148393500?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote>
<p>
<script src="https://platform.x.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<h3>முதலமைச்சர் எங்கே ஒளிந்து கொண்டார்.?</h3>
<p>இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்? என தெரிவித்துள்ளார். மேலும் Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா? உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள் என <a title="ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/mk-stalin" data-type="interlinkingkeywords">ஸ்டாலின்</a> அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/here-is-a-simple-method-to-drive-lizards-away-from-your-home-268679" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article