
<p>கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விசாரணையை கண்காணித்து வரும் சூழலில் எத்தகைய கருத்தையும் இந்த நீதிமன்றம் முன்வைக்க விரும்பவில்லை.</p>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் </strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்குவதை எதிர்த்து பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அரசுப்பணி ஆணை வழங்கும் விழா அன்று, தற்காலிக அடிப்படையிலேயே பணி வழங்கப்பட வேண்டும். முதல் மாதம் ஊதியம் பெறும் முன்பாக வழக்கு விசாரிக்கப்பட்டு முடிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு உதவும் வகையில், மனுதாரர், அரசுத்தரப்பு என அனைத்துத் தரப்பிலும் வாதங்களை முன்வைத்த வழக்கறிஞர்களுக்கு பாராட்டுக்கள். கருணை அடிப்படையிலான இந்த பொதுநல வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. அது தொடர்பான கேள்வி எழும் போது, உச்சநீதிமன்றம், நீதிமன்றம் இயல்பாக வழங்கும் நிவாரணங்களைக் கோரலாம் என தெளிவுபடுத்தியுள்ளது. கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விசாரணையை கண்காணித்து வரும் சூழலில் எத்தகைய கருத்தையும் இந்த நீதிமன்றம் முன்வைக்க விரும்பவில்லை.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>சிவகாசியில் அடிக்கடி வெடி விபத்து</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">அரசுத்தரப்பில், "கருணைப்பணியை பொறுத்தவரை சில வழிகாட்டுதல்கள் உள்ளன. வயது, கல்வி என தகுதியின் அடிப்படையிலேயே வழங்க வேண்டும். அவ்வாறு தான் கரூர் சம்பவ அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. இதை எப்படி எதிர்க்கிறார்கள்? என தெரியவில்லை. அரசுப்பேருந்து விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, அரசு வேலை வாய்ப்பு வழங்கினால் எப்படி என்ற கேள்வியும் எழுகிறது. சிவகாசியில் அடிக்கடி வெடி விபத்து நிகழும் சூழலில், அவர்களுக்கு அரசுப்பணி கோரினால் என்ன செய்வது?</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>வேலைவாய்ப்பிற்காக பலரும் காத்திருக்கிறார்கள்.</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">வேலைவாய்ப்பிற்காக பலரும் காத்திருக்கிறார்கள். அது குறித்து TNPSC விபரங்களைத் தரும் என எண்ணினோம். ஆனால், அரசாணை கருணைப்பணி அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய அதன் ஒப்புதல் பெற விலக்களித்துள்ளது தெரியவந்தது. திறன் வளர் பயிற்சிகளை வழங்கி பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு உதவலாமே? அது இவ்வாறு பணி வழங்குவதை விட பயனுள்ளதாக இருக்கும். அரசுத்தரப்பில் சாதாரண பணி வழங்குவதாக் கூறுவதை ஏற்க இயலாது. எப்பணியும் சாதாரண பணி அல்ல. அது ஒருவரின் குடும்பத்திற்கு உதவும் பணியே. எனவே கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்கிய அரசாணை ரத்து செய்து உத்தரவிட்டனர். தொடக்கத்திலேயே முதல் மாத ஊதியம் வழங்கும் முன்னரே வழக்கு விசாரித்து முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் விசாரிக்கப்பட்டுள்ளது</div>
Source: Read Full Article