இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?

இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
News Image
<p style="text-align: justify;">இந்திய வாகன உற்பத்தி சந்தை தற்போது முழுக்க முழுக்க எலக்ட்ரிக் கார் அல்லது ஹைப்ரிட் கார் நோக்கி திரும்பியிருக்கும் வேளையில், இந்த சந்தையை இரு பெரிய நிறுவனங்கள் சரி பாதியாக பங்குப்போட்டுக் கொண்டு இயங்கி வருகிறது. இதனால் மற்ற அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எஞ்சியுள்ள சிறிய சந்தையில் போட்டிப்போட வேண்டியுள்ளது.</p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/07/30db6515088e3c21ec12ab7cc5389f251783446512595193_original.JPG" /></p> <p style="text-align: justify;">இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் எலக்ட்ரிக் வாகன பிரிவில் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா மிகப்பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தினாலும், ஓன்றுக்கொன்று போட்டிப்போடாமல் நிலையான வர்த்தகத்தை பெற்று வருகிறது. இதனால் இவ்விரு நிறுவனங்களின் வர்த்தகமும், ஆதிக்கமும் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் மற்ற நிறுவனங்கள் தடுமாற்றம் அடைய துவங்கியுள்ளது.உதாரணமாக மஹிந்திரா நிறுவனம் தனது அனைத்து எலக்ட்ரிக் கார்களையும் Born Electric SUV பிரிவில் மட்டுமே அறிமுகம் செய்து வருகிறது. இதேபோல் காரின் விலை, தரம், வசதிகள் அனைத்தும் ப்ரீமியம் நிலையில் வைத்துள்ளது.</p> <p style="text-align: justify;">மேலும் புதிய கார்கள் அனைத்து கார் பிளாட்பார்ம் மேம்படுத்துவதன் மூலம் உருவாக்கப்படும் கார்களாக உள்ளது. இதன் மூலம் மஹிந்திரா உயர் விலை கொண்ட கார்களை அதிக லாபம் நோக்கத்துடன் அறிமுகம் செய்து வருகிறது.மேலும் சந்தையில் போட்டி அதிகரிக்கும் போது platform economics முறை மஹிந்திராவுக்கு பெரிய அளவில் பலன் அளிக்கும் என நம்புகிறது. மேலும் 2031ஆம் ஆண்டுக்குள் 6 புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்வதை டார்கெட் வைத்துள்ளது மஹிந்திரா.</p> <p style="text-align: justify;">அடுத்ததாக டாடா மோட்டார்ஸ் பெரிய அளவிலான வர்த்தக கொள்கையை உருவாக்கியுள்ளது, மக்களுக்கு தேவையான, பிடித்தமான கார்களை அறிமுகம் செய்வது முக்கிய டார்கெட்டாக வைத்துள்ளது. இதன் மூலம் எண்ணிக்கை அடிப்படையிலான ஆதிக்கத்தை உருவாக்கியுள்ளது.தற்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தை ப்ரீமியம் நோக்கி நகர்ந்துக்கொண்டு இருக்கும் போது, டாடா மோட்டார்ஸ் மலிவு விலை கார்களில் இருந்து ப்ரீமியம் ரக கார்களை நோக்கி நகரும் போது விலை அடிப்படையில் மீடியன் அளவீட்டை தொடும். இதன் மூலம் தொடர்ந்து ஈவி சந்தையில் வால்யூம் + வருவாய் அடிப்படையிலான ஆதிக்கத்தை டாடா மோட்டார்ஸ் பெறும் என நம்புகிறது.</p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/07/f3146e370025eec53aaf2dd80e0846de1783446482283193_original.JPG" /></p> <p style="text-align: justify;">மஹிந்திரா நிறுவனம் 2026ஆம் நிதியாண்டில் 50,835 கார்களை விற்பனை செய்து 15,089 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது, இதன் இந்நிறுவனத்தின் மொத்த EV வருவாய் பங்கீடு 34.8 சதவீதமாக உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பார்க்கும் போது 92,179 கார்களை விற்பனை செய்து 13,410 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த பயணிகள் வாகன விற்பனையில் ஈவி பிரிவு வருவாய் மட்டும் 63.8 சதவீதமாக உள்ளது.தற்போதைக்கு டாடா மோட்டாக்ஸ் வால்யூம் கேம் விளையாடுகிறது, மஹிந்திரா ப்ரீமியம் கேம் விளையாடுகிறது.</p> <p style="text-align: justify;">ஜூன் காலாண்டு நிலவரத்தின் படி எலக்ட்ரிக் கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் 39 சதவீத பங்கீட்டையும், மஹிந்திரா 24.3 சதவீத பங்கீட்டையும் கொண்டு பெரும் ஆதிக்கம் செய்து வருகிறது. இதற்கு அடுத்தப்படியாக JSW MG மோட்டார்ஸ் 19.9 சதவீத சந்தையை வைத்துள்ளது. இந்த 3 நிறுவனங்களுமே 83.2 சதவீத சந்தையை பிடித்திருக்கும் நிலையில் மீதமுள்ள 16.8 சதவீத சந்தைக்கு தான் மாருதி சுசூகி, வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட், BYD, ஹூண்டாய் போன்றவை போட்டிப்போட்டு வருகிறது.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks