
<p><span dir="auto">பிஎஃப் Claim செயல்முறையை முன்பை விட வேகமாகவும் எளிதாகவும் மாற்றுவதற்காக, EPFO ஒரு புதிய கட்டமைப்பை செயல்படுத்தியுள்ளது. இந்த புதிய மாற்றத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், தகுதியுள்ள உறுப்பினர்கள் இப்போது ஆட்டோ-செட்டில்மென்ட் மூலம் 5 லட்சம் ரூபாய் வரையிலான பிஎஃப் Claim-களை எளிதாக தாக்கல் செய்யலாம். எனவே, உங்களிடம் தேவையான அனைத்து ஆவணங்களும் இருந்து, கேஒய்சி-யையும் (KYC) முடித்திருந்தால், உங்கள் க்ளைமை வெறும் 3 நாட்களில் செட்டில் செய்துவிடலாம். </span></p>
<p><span dir="auto">சமீபத்திய ஆண்டுகளில் வருங்கால வைப்பு நிதி கோரிக்கை செயல்முறையில் செய்யப்பட்ட மிகப்பெரிய மேம்பாடாக இந்த மாற்றம் கருதப்படுகிறது. ஊழியர்களுக்கு குறைந்த காலக்கெடுவில் நிதியை பெற வழிவகை செய்தல், ஆவணப் பணிகளை குறைத்தல் மற்றும் கோரிக்கை முறையை சீரமைத்தல் ஆகியவை இதன் முதன்மை நோக்கங்களாகும்.</span></p>
<h2><span dir="auto">தானியங்கி தீர்வு வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு</span></h2>
<p><span dir="auto">EPFO, தானியங்கி தீர்வு வரம்பை 1 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. இது, எந்தவொரு மனிதத் தலையீடும் இன்றி, அதிகமான உறுப்பினர்கள் முன்கூட்டியே PF பணத்தை எடுக்கும் வசதியை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறது. மேலும், இது டிஜிட்டல் சரிபார்ப்பை ஊக்குவிக்கவும், கோரிக்கை நிராகரிப்புகளை குறைக்கவும், மற்ற செயல்முறைகளை ஒட்டுமொத்தமாக எளிமையாக்கவும் செயல்பட்டு வருகிறது.</span></p>
<p><span dir="auto"><iframe title="Annamalai joins ADMK? | அதிமுக தலைவர் <a title="அண்ணாமலை" href="https://tamil.abplive.com/topic/annamalai" data-type="interlinkingkeywords">அண்ணாமலை</a>?ரகசிய கூட்டத்தில் நடந்தது என்ன? | EPS | TVK | Vijay" src="https://www.youtube.com/embed/ApIIwmbRWQ0" width="696" height="391" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></span></p>
<h2><span dir="auto">PF Claim 3 நாட்களில் எப்படி தீர்க்கப்படும்.?</span></h2>
<p><span dir="auto">புதிய விதிகளின்படி, உங்கள் UAN செயலில் இருந்து, ஆதார் இணைக்கப்பட்டு, KYC முழுமையாக முடிந்திருந்தால், உங்கள் PF கோரிக்கையை வெறும் மூன்று நாட்களுக்குள் செலுத்திக் கொள்ளலாம். இருப்பினும், கூடுதல் சரிபார்ப்பு அல்லது ஆவணச் சரிபார்ப்பு தேவைப்படும் கோரிக்கைகளுக்கு அதிக காலம் ஆகலாம். </span></p>
<p><span dir="auto">முறையான ஒப்புதல் இல்லாமல் 20 நாட்களுக்கு மேல் ஒரு கோரிக்கையை தாமதப்படுத்தும் எந்தவொரு அதிகாரிக்கும் 12 சதவீதம் வரை அபராதம் விதிக்கவும் EPFO முடிவு செய்துள்ளது. இது கோரிக்கை செயல்முறையில் ஏற்படும் தேவையற்ற தாமதங்களை தடுக்க உதவும். </span></p>
<h2><span dir="auto">PF கோருவதற்கு முன் இதை சரிபார்த்துக் கொள்ளவும்</span></h2>
<ul>
<li><span dir="auto">உங்கள் UAN (யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்) செயலில் இருக்க வேண்டும்.</span></li>
<li><span dir="auto">பான் (PAN) எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.</span></li>
<li><span dir="auto">கேஒய்சி (KYC) செயல்முறை முடிக்கப்பட வேண்டும்.</span></li>
<li><span dir="auto">யுஏஎன் (UAN) எண்ணை ஆதார் உடன் இணைப்பது அவசியம்.</span></li>
<li><span dir="auto">பதிவுசெய்யப்பட்ட கைபேசி எண்ணும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். அப்போதுதான் OTP சரிபார்ப்பை எளிதாக செய்ய முடியும். </span></li>
</ul>
<p><span dir="auto">இந்த நிபந்தனைகள் அனைத்தையும் நீங்கள் பூர்த்தி செய்தால், உங்கள் பிஎஃப் கோரிக்கை விரைவாக செயல்படுத்தப்பட்டு, குறைந்த நேரத்தில் உங்கள் வங்கிக் கணக்கிற்குப் பணம் செலுத்தப்படும்.</span></p>
<p> </p>
<p> </p>
<p><span dir="auto"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/6-heart-attack-warning-symptoms-body-gives-14-days-before-265946" width="631" height="381" scrolling="no"></iframe></span></p>
Source: Read Full Article