<p><strong>CM Vijay:</strong> காவிரி நீர் மற்றும் மேகதாது திட்டம் தொடர்பான பிரச்னைகளை சுமூகமாக முடிவுக்கு கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளாராம்.</p>
<h2><strong>கர்நாடக முதலமைச்சரை சந்திக்கும் CM விஜய்?</strong></h2>
<p>தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை கொடுக்காமல் இழுத்தடித்து வரும் கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டும் தொடர்பான முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், காவிரி நீர் பகிர்வு மற்றும் மேகதாது அணைத் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சந்திப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த பிரச்னையை சுமூகமாக முடிக்க முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> பெங்களூருவிற்கே சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் எனவும் கூறப்படுகிறது. </p>
Source: Read Full Article