
<p>சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை<strong>(04.07.2026)</strong> எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், <strong>ஜூலை 4-ம்</strong> தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p>
<p>சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<h3>திருமுடிவாக்கம்</h3>
<ul>
<li>எம்.கே.பி.நகர்</li>
<li>மகளிர் தொழில் பூங்கா</li>
<li>திருநீர்மலை மெயின் ரோடு</li>
<li>பெருமாள் நகர்</li>
<li>ஸ்ரீ கிருஷ்ணா நகர்</li>
<li>வழுதாளம்பேடு</li>
<li>மைக்ரோ எஸ்டேட்</li>
<li>பாம் ரிவேரா அபார்ட்மென்ட்</li>
<li>ராயல் கேஸில் I, J, O, P, Q மற்றும் R பிளாக்ஸ்</li>
<li>அமர்பிரகாஷ் அபார்ட்மென்ட்</li>
<li>மகாலட்சுமி நகர்</li>
<li>குமரன் நகர்</li>
<li>மகாலட்சுமி கூட்டுறவு சொசைட்டி</li>
<li>பிகேவி மகா நகர்</li>
<li>கலைமகள் நகர்</li>
<li>கற்பகம் நகர்</li>
<li>தாசியோவா தொழில் பூங்கா மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்</li>
</ul>
<p><iframe title="Anitha Radhakrishnan arrest | ”என்னை விடுங்க” வாக்குவாதம் செய்த அனிதா! இழுத்து சென்ற POLICE" src="https://www.youtube.com/embed/1ErRoeX2KGQ" width="696" height="391" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h3>குன்றத்தூர்</h3>
<ul style="list-style-type: circle;">
<li>சிறுகளத்தூர்</li>
<li>கெலித்பேட்டை</li>
<li>நந்தம்பாக்கம்</li>
<li>பெரியார் நகர்</li>
<li>அஞ்சுகம்பாக்கம்</li>
<li>மலையம்பாக்கம்</li>
<li>பஜார் தெரு</li>
<li>மேத்தா நகர்</li>
<li>ஜி சதுக்கம்</li>
<li>மணிகண்டன் நகர்</li>
</ul>
<p>மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.</p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/6-heart-attack-warning-symptoms-body-gives-14-days-before-265946" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article