ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?

ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
News Image
<h2>முதலமைச்சர் விஜய் கரூர் பயணம்- திமுக புகார்</h2> <p>கரூரில் தவெக பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிஐ விசாரணையில் உள்ள நிலையில், <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> நிர்வாகியும், மூத்த அமைச்சருமான ஆதவ் அர்ஜூனா பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்த நிலையில், சிபிஐயிடம் புகார் தெரிவிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மேற்பார்வைக் குழு மற்றும் சிபிஐயிடம் திமுக புகார் அளித்துள்ளது. &nbsp;திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அளித்துள்ள மனுவில்,&nbsp;</p> <h2>ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வை குழுவிடம் புகார்</h2> <p>A. கரூர் நெரிசல் விபத்து வழக்கில் (குற்ற எண் 855/2025, தற்போது சிபிஐ புதிய டெல்லி RC 2172025 S 0022/AC-II என மறுபதிவு செய்யப்பட்ட வழக்கு) குற்றஞ்சாட்டப்பட்டவராகவும், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளராகவும், மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் உள்ள திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் 02.07.2026 அன்று ஆற்றிய பொதுப் பேச்சு, வழக்கின் முக்கிய சாட்சிகளைப் பாதிக்கும் வகையிலும், முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக ஒரு கருத்து உருவாக்கவும், காவல்துறையைப் பற்றிய கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் நடைபெற்று வரும் விசாரணையில் தலையிடும் முயற்சியாகவும் இருப்பதால், அதுகுறித்து சிபிஐ தனி வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.</p> <p>B. மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் கரூருக்கு மேற்கொள்ளவுள்ள பயணமும், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி, கருணை அடிப்படையிலான பணிநியமனம் அல்லது பிற அரசு நலன்கள் வழங்கப்படுவதும், சிபிஐயின் கருத்தைப் பெற்ற பின்னர் மேற்பார்வைக் குழு அவசியம் எனக் கருதும் பாதுகாப்பு நிபந்தனைகளின் கீழ் மட்டுமே நடைபெற வேண்டும்.</p> <p>C. மேற்கண்ட தொடர்புகள் நடைபெறுவதற்கு முன், வழக்கின் முக்கிய சாட்சிகளின் நிலையை சிபிஐ உரிய முறையிலும் வெளிப்படையான முறையிலும் பதிவு செய்து பாதுகாக்க உத்தரவிட வேண்டும். இதன் மூலம் அவர்களின் வாக்குமூலங்களின் சான்று மதிப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.</p> <p>D. நியாயமான, சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்ய மேற்பார்வைக் குழு தேவையான பிற உத்தரவுகள் அல்லது வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.</p> <h2>சிபிஐயிடம் அளிக்கப்பட்ட புகார்</h2> <p>A. 02.07.2026 அன்று திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் ஆற்றிய பொதுப் பேச்சு, கரூர் நெரிசல் விபத்து வழக்கின் முக்கிய சாட்சிகளைப் பாதிக்கும் வகையிலும், நடைபெற்று வரும் விசாரணையில் தலையிடும் முயற்சியாகவும் இருப்பதால், அதுகுறித்து தனி வழக்குப் பதிவு செய்து, அதன் விவரத்தை உச்சநீதிமன்றம் அமைத்துள்ள மேற்பார்வைக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும்.</p> <p>B. மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> அவர்கள் கரூருக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தையும், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள நிதியுதவி, கருணை அடிப்படையிலான பணிநியமனம் அல்லது பிற அரசு நலன்கள் தொடர்பான நடவடிக்கைகளையும் சிபிஐ கவனத்தில் கொள்ள வேண்டும்.</p> <p>C. அத்தகைய தொடர்புகள் நடைபெறுவதற்கு முன், முக்கிய சாட்சிகளின் நிலையை உரிய முறையிலும் வெளிப்படையான முறையிலும் பதிவு செய்து பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் சாட்சியங்களின் சான்று மதிப்பு பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.</p> <p>D. மேற்கண்ட சூழலில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என சிபிஐ கருதினால், அரசியல் நிர்வாகத்தினருக்கும் முக்கிய சாட்சிகளுக்கும் இடையிலான தொடர்புகள் நடைபெற்று வரும் விசாரணையை நேரடியாகவோ அல்லது தோற்றப்பூர்வமாகவோ பாதிக்காத வகையில் தேவையான உத்தரவுகளைப் பெற, அந்த விவகாரத்தை மேற்பார்வைக் குழுவின் முன் வைக்க வேண்டும்.</p> <p>E. மேலும், சட்டத்தின்படி சிபிஐ பொருத்தமானதாகக் கருதும் பிற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அதில், முக்கிய சாட்சிகளின் வாக்குமூலங்களின் சான்று மதிப்பைப் பாதுகாப்பது, புகாரில் கூறப்பட்டுள்ள செயல்பாடுகள் மேலதிக விசாரணையையோ சட்டரீதியான நடவடிக்கையையோ தேவைப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வது, மற்றும் தேவையெனில் சம்பந்தப்பட்ட உண்மைகளை மேற்பார்வைக் குழுவின் முன் வைத்து, உரிய மேலதிக உத்தரவுகளைப் பெறுவது ஆகியவை அடங்கும். என அந்த புகார் மனுவில் திமுக கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/what-is-the-highlight-of-tata-tiago-ev-262178" width="631" height="381" scrolling="no"></iframe></p> <p>&nbsp;</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks