
<p>தேவகோட்டையில் அடுத்தடுத்த வீடுகளில் பகல் கொள்ளை சம்பவம் இருவர் கைது நகைகள் பணம் கார் பறிமுதல்.</p>
<div dir="auto"><strong>கேட் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை செல்லப்ப செட்டியார் கோயில் அருகே கே.வி.ஆர்.எம் தெரு உள்ளது. இங்கு நகைக்கடையில் வேலை செய்யும் குமார்- (51) என்பவரது வீடு உள்ளது.அவருக்கு மனைவி இல்லை. தனது மூன்று பெண் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். குமார் கடந்த 16ம்தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் வெளி கேட் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியுடன் உள்ளே சென்றார்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">உள்ளே இரும்பு பீரோ உடைக்தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.கப்பட்டு அதில் இருந்த. 8 பவுன் தங்க நகைகள், 2 செல்போன்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதே வீட்டின் எதிரில் தனியார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை மீனாட்சி (55) என்பவரது வீட்டிலும் கொள்ளைச் சம்பவம் நடந்தது. ஆசிரியை பள்ளியில் இருந்து மாலையில் வீட்டிற்கு வந்தபோது தெரிய வந்துள்ளது. அவரது வீட்டில் இருந்த ரூபாய் 30,000 ஆயிரம் கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் குறித்து.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>6 பவுன் தங்க நகை, ரொக்கம் 24,500 ரூபாய் மற்றும் கார் ஒன்று பறிமுதல் </strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">தேவகோட்டை டிஎஸ்பி கண்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் சப்இன்ஸ்பெக்டர் அகிலன் மார்ட்டின் தலைமையில் தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடிவந்தனர். இந்நிலையில் காரைக்குடி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன்(42) ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி விக்னேஷ்(35) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த 6 பவுன் தங்க நகை, ரொக்கம் 24,500 ரூபாய் மற்றும் கார் ஒன்று பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.</div>
Source: Read Full Article