
<p>ஆந்திர மாநிலம் குண்டூரில் குடிநீர் குழாய் தகராறில் பெண் ஒருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். </p>
<p>இந்த சம்பவம் கடந்த ஜூலை 15ம் தேதி நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டூரில் உள்ள கிருஷ்ணபாபு காலனியில் ஒரு பெண் தனது வீட்டின் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டிருந்த குழாயிலிருந்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்தார்.</p>
<p>அப்போது தெலுங்கு தேசம் கட்சியின் 21வது வார்டு செயலாளர் மல்லேலா வெங்கடரமண மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அப்பெண்ணிடம் தண்ணீர் பிடித்தது தொடர்பாக வாக்குவாதம் செய்து தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் பயந்து போன அப்பெண் தனது வீட்டிற்குள் ஓடிச் செல்ல முயன்றபோது மாதவி என அடையாளம் காணப்பட்ட ஒரு திருநங்கை, அவரது ஆடைகளைக் களைந்து உதைத்தும் மிதித்தும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. </p>
<p><iframe title="Vijay Inspection | ’’தண்ணி வரல; பாத்ரூம் நாறுது’’போட்டுக்கொடுத்த மாணவர்..CM <a title=" data-type="interlinkingkeywords"><a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>யின் வாத்தி ரெய்டு" src="https://www.youtube.com/embed/rFSTOJf83pI" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>தன்னை விட்டு விடுமாறு அப்பெண் எதிர் தரப்பினரிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் அதனைக் கொஞ்சம் கூட கண்டுக் கொள்லாமல் மல்லேலா வெங்கடரமண மூர்த்தி தரப்பு தாக்குதலைத் தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.</p>
<p>இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஜூலை 16ம் தேதி போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் மல்லேலா வெங்கடரமண மூர்த்தி உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நாகரம்பாளையம் வட்ட ஆய்வாளர் சத்யநாராயணா தலைமையிலான குழுவினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். வீட்டு ஆழ்துளைக் கிணறு மோட்டார் தொடர்பான நீண்டகால தகராறின் விளைவாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது தெரிய வந்தது. இதுவரை ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களை கைது செய்யும் பணி தீவிரமடைந்து வருகிறது.</p>
<p><strong>Also Read: <a title=" N Anand: தலைவருடன் தொடரும் நிழலே.. அன்புள்ள அப்பா.. அமைச்சர் ஆனந்துக்கு விதவிதமாக பிறந்தநாள் வாழ்த்து!" href="https://tamil.abplive.com/news/tamil-nadu/tn-ministers-convey-their-birthday-wishes-to-tvk-general-secretary-n-anand-268000" target="_blank" rel="noopener"> N Anand: தலைவருடன் தொடரும் நிழலே.. அன்புள்ள அப்பா.. அமைச்சர் ஆனந்துக்கு விதவிதமாக பிறந்தநாள் வாழ்த்து!</a></strong></p>
<p>இதனிடையே இந்த சம்பவத்திற்கு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ளப் பதிவில், “குண்டூரில் இருந்து பதிவான சம்பவம் என்னை மிகவும் கலக்கமடையச் செய்துள்ளது. எந்தவொரு பெண்ணையும் அவமானப்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் நமது சமூகத்தில் அதற்கு இடமில்லை. உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன். ஒரு குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட கட்சிப் பொறுப்பாளர் இடைநீக்கம் செய்யப்படுகிறார். எனது அரசின் உறுதிப்பாடு சந்தேகத்திற்கு இடமற்றது. அச்சமோ பாரபட்சமோ இன்றி, சட்டம் நேர்மையாகவும் உறுதியாகவும் அமல்படுத்தப்படும். அரசியல் சார்பு காரணமாக எந்தவொரு தனிநபருக்கும் பாதுகாப்பு வழங்கப்படாது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் தனது கண்ணியமும் பாதுகாப்பும் எப்போதும் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும்” தெரிவித்துள்ளார். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/do-you-know-you-should-not-drink-tea-at-night-267742" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article