கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்

கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
News Image
<p>கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்ல 3 மாதத் தடை வரவேற்கத்தக்கது என்றும் நிரந்தரத்&nbsp;தடை விதிப்பதோடு, சிபிஐ விசாரணைக்கும் ஆணையிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் &nbsp;வலியுறுத்தி உள்ளார்.</p> <p><strong>இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:</strong></p> <p>''தமிழ்நாட்டிலிருந்து கருங்கல் பாறைகள், ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை தற்காலிகமானதாக இருந்தாலும் வரவேற்கத்தக்கது.<br /><br />தமிழ்நாட்டின் நெல்லை, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு மிகப்பெரிய அளவில் கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. முந்தைய திமுக ஆட்சியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த காட்பாதரின் ஆதரவுடன் கனிமவளக் கடத்தல் உச்சக்கட்டத்தை அடைந்தது. &nbsp;இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசு பொறுப்பேற்ற சில நாள்களிலேயே வலியுறுத்தியிருந்தேன். அதைத் தொடர்ந்து சில குவாரிகளுக்கு &nbsp;கனிமவளத்துறை அமைச்சரே நேரில் சென்று ஆய்வு நடத்தினாலும் &nbsp;கனிமக் கொள்ளையும், கடத்தலும் குறையவில்லை.<br /><br /></p> <h2><strong>மாற்றுப்பாதையில் கடத்தல்</strong></h2> <p>தமிழ்நாட்டில் இருந்து கேரளத்திற்கு செல்வதற்கான தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிகள் காரணமாக அந்த சாலையில் கனிம வளங்களை கொண்டு செல்லத் தடை விதித்த போதிலும் கடத்தல் குறையவில்லை. மாறாக மாற்றுப்பாதையில் கடத்தல் தொடர்ந்தது.</p> <p>அதைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தில் பற்றாக்குறை காலங்களில் கனிமவளங்களை கேரளத்திற்கு கொண்டு செல்லக் கூடாது என்றுதான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, நிரந்தரத் தடை இன்று வரை அரசால் விதிக்கப்படவில்லை; அதனால் உடனடியாக கனிமக் கடத்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 22-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தேன்.</p> <p><strong>கேமரா கண்காணிப்பு அவசியம்</strong><br /><br />அதன் தொடர்ச்சியாகத்தான் வெளி மாநிலங்களுக்கு கனிமங்களைக் கடத்திச் செல்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. &nbsp;இந்தத் தடை முழு அளவில் &nbsp;செயல்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து கேரளம் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் கண்காணிப்பு காமராக்களைப் பொறுத்தி கனிமவளங்கள் கடத்தப்படுகின்றனவா? என்பதைக் கண்காணிக்க வேண்டும்.<br /><br />அதுமட்டுமின்றி, இப்போது 3 மாதங்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கனிமவளக் கடத்தலுக்கானத் தடையை நிரந்தரத் தடையாக மாற்ற வேண்டும். மேலும், கனிமக் கொள்ளை மற்றும் கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/how-to-identify-a-fake-qr-code-269148" width="631" height="381" scrolling="no"></iframe></p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks