தென்னையில் குருத்தழுகல் நோயை தாக்கும் முறைகள் –  விவசாயிகளுக்கு வேளாண் துறை தெரிவித்தது என்ன?

தென்னையில் குருத்தழுகல் நோயை தாக்கும் முறைகள் –  விவசாயிகளுக்கு வேளாண் துறை தெரிவித்தது என்ன?
News Image
<p style="text-align: justify;"><strong>தஞ்சாவூர்:</strong> தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக அதிகளவில் மேற்கொள்ளப்படும் தென்னை சாகுபடியில், குருத்தழுகல் நோயை தடுக்கும் முறைகள் பற்றி விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனைகள் வழங்கியுள்ளது.</p> <p style="text-align: justify;">குறிப்பாக ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை இந்த நோய் தீவிரமாக பரவும் வாய்ப்பு இருப்பதால், விவசாயிகள் தொடர்ந்து தென்னந்தோப்புகளை கண்காணித்து, ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.</p> <p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/19/a3149fcb02be405393c8de880ecc0eaf1784463062938733_original.jpg" /></p> <p style="text-align: justify;"><strong>20 ஆண்டுகளுக்கு குறைவான தென்னை மரங்களுக்கு அதிக பாதிப்பு</strong></p> <p style="text-align: justify;">தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக விவசாயிகளுக்கு நிலையான வருமானத்தை வழங்கும் பயிராக தென்னை விளங்கி வருகிறது.</p> <p style="text-align: justify;">இந்நிலையில், அதிக மகசூல் தரும் ஒட்டு தென்னை ரகங்களின் இளம் நாற்றுகள் மற்றும் 20 ஆண்டுகளுக்கு குறைவான இளம் மரங்கள் குருத்தழுகல் நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக வேளாண்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக பருவமழைக் காலத்தில் அதிக ஈரப்பதம் நிலவுவதால் பூஞ்சைத் தொற்று வேகமாக பரவி, ஆரோக்கியமான மரங்களுக்கும் எளிதில் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;"><strong>நோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன?</strong></p> <p style="text-align: justify;">குருத்தழுகல் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மிகவும் முக்கியம் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோய் தாக்கிய தென்னை மரங்களில் முதலில் இளம் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி வளைந்து வாடத் தொடங்கும். பின்னர் அவை பழுப்பு நிறமாக மாறி அடிப்பகுதி காய்ந்து கருமையான நிறத்தை அடையும்.</p> <p style="text-align: justify;">அதன் பிறகு தென்னையின் குருத்துப் பகுதி அழுகி, அதை கையால் இழுத்தால் எளிதாக வெளிவரும். மேலும், பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசும். நோய் தீவிரமடையும் போது புதிய இலைகள் உருவாகாமல், முழு குருத்துப் பகுதியும் அழுகி, இறுதியில் மரமே பட்டுப்போய் மடிந்து விடும். மேலும் வெளிப்புற இலைகளில் பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றி, அவை படிப்படியாக உள்வட்ட இலைகளுக்கும் பரவி மரத்தின் வளர்ச்சியை முற்றிலும் பாதிக்கின்றன.</p> <p style="text-align: justify;"><strong>ஆரம்பத்திலேயே சிகிச்சை அவசியம்</strong></p> <p style="text-align: justify;">குருத்தழுகல் நோய் ஆரம்ப நிலையில் இருப்பது தெரியவந்தவுடன் உடனடியாக பாதிக்கப்பட்ட இளம் இலைகளின் அழுகிய பகுதிகளை வெட்டி அகற்றி, அவற்றை எரித்து அழிக்க வேண்டும் என்று வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்பின், போர்டோ பசை (ஒரு லிட்டர் தண்ணீரில் 100 கிராம் நீர்த்த சுண்ணாம்பு மற்றும் 100 கிராம் காப்பர் சல்பேட் கலந்து தயாரிக்கப்படும் கலவை) பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி, மழைநீர் நேரடியாக படாதவாறு மண்பானை அல்லது பொருத்தமான பாதுகாப்பு மூடியால் மூடி வைக்க வேண்டும். புதிய இலைகள் உருவாகும் வரை இந்த பாதுகாப்பு தொடர வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>அருகில் உள்ள மரங்களுக்கும் தடுப்பு மருந்து</strong></p> <p style="text-align: justify;">ஒரு சதவீத போர்டோ கலவை அல்லது 0.3 சதவீத காப்பர் ஆக்ஸிகுளோரைடு கரைசலை (ஒரு லிட்டர் தண்ணீரில் 3 கிராம் மருந்து) நோய் பாதித்த மரங்களுக்கும், அதற்கு அருகிலுள்ள ஆரோக்கியமான மரங்களுக்கும் தெளிக்க வேண்டும் என வேளாண்துறை பரிந்துரைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து இந்த நோய் தாக்கும் தென்னந்தோப்புகளில், பருவமழை தொடங்குவதற்கு முன்பும், மழைக்காலத்திலும் பூஞ்சைக் கொல்லி மருந்துகளை முன்னெச்சரிக்கையாக பயன்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;"><strong>குட்டை ரக தென்னைக்கு தனி பரிந்துரை</strong></p> <p style="text-align: justify;">குட்டை ரக தென்னை மரங்களில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு அல்லது போர்டோ கலவை போன்ற மருந்துகள் சில நேரங்களில் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். எனவே, அத்தகைய ரகங்களுக்கு மான்கோசெப் பூஞ்சைக் கொல்லி மருந்தை சிறிய துளையிட்ட பைகளில் தலா 2 கிராம் அளவில் நிரப்பி, குருத்துக்கும் மட்டைக்கும் இடையில் பருவமழைக் காலங்களில் வைக்கலாம் என்றும் வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.</p> <p style="text-align: justify;"><strong>வருமுன் காப்போம் &ndash; வேளாண்துறையின் வேண்டுகோள்</strong></p> <p style="text-align: justify;">குருத்தழுகல் நோய் தாக்கிய பிறகு சிகிச்சை அளிப்பதை விட, ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வேளாண்துறை வலியுறுத்தியுள்ளது. எனவே, தஞ்சாவூர் மாவட்ட தென்னை விவசாயிகள் தங்களது தோப்புகளை அடிக்கடி ஆய்வு செய்து, நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையம் அல்லது தோட்டக்கலைத் துறை அதிகாரிகளை அணுகி ஆலோசனை பெற்று உரிய மேலாண்மை முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks