
<p>சென்னையில் எஸ்பிஐ வங்கி மேலாளர் கன்னத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி பளார் என அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.</p>
<p>சென்னை அடையாறில் கயல்விழிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கியின் மேலாளரை கன்னத்தில் அறைந்துள்ளார். எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வரும் கட்டிடத்தின் லிப்ட் செயல்படாத காரணத்தினால் உரிமையாளரான கயல்விழியிடம் புகார் அளித்துள்ளனர். லிப்ட் செயல்பாடு தொடர்பான பிரச்சனை குறித்து பேச வந்துள்ளார். அப்போது வங்கி மேலாளருடன் கயல்விழி வாக்குவாதம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.</p>
<p>கயல்விழி கோபமாக பேசுவதை வங்கி மேலாளர் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு கேட்டிருந்ததால் ஆத்திரமடைந்த அவர், “நான் பேசும் போது கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாயா?” என கூறி மேலாளர் கன்னத்தில் பளார் விட்டுள்ளார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.</p>
<p> </p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/l6eGQHR0H1U?si=Nj4teDYBKNvNV-ZG" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>வங்கி மேலாளர் கன்னத்தில் பளார் என அறைந்த கயல்விழி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது,. சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கயல்விழி மீது அவதூறாக பேசுதல், தாக்குதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article