திருநாகேஸ்வரத்தில் பரபரப்பு; சாலைமறியலில் ஈடுபட்ட பெண்கள்! போலீசார் சமரசம் எதற்காக?

திருநாகேஸ்வரத்தில் பரபரப்பு; சாலைமறியலில் ஈடுபட்ட பெண்கள்! போலீசார் சமரசம் எதற்காக?
News Image
<p style="text-align: justify;"><strong>கும்பகோணம்:</strong> தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் கடைவீதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை உடனடியாக அகற்றக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.</p> <p style="text-align: justify;"><strong>இயல்பு வாழ்க்கை பாதிப்பு என புகார்</strong></p> <p style="text-align: justify;">திருநாகேஸ்வரம் கடைவீதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடைக்கு வரும் சிலர் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு அப்பகுதியில் சுற்றித்திரிவதாகவும், இதனால் பெண்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.&nbsp;குறிப்பாக இரவு நேரங்களில் மது அருந்தியவர்களால் தங்களுக்கு இடையூறும், பாதுகாப்பற்ற சூழலும் ஏற்படுவதாக அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர்.</p> <p style="text-align: justify;"><strong>கும்பகோணம்&ndash;காரைக்கால் சாலையில் மறியல்</strong></p> <p style="text-align: justify;">இதையடுத்து, அரசு மதுபானக் கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் நேற்று கும்பகோணம்&ndash;காரைக்கால் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.</p> <p style="text-align: justify;"><strong>கடை முன்பு தர்ணா</strong></p> <p style="text-align: justify;">சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சாலையில் இருந்து கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து பெண்கள் சாலையில் இருந்து எழுந்து, அருகிலிருந்த அரசு மதுபானக் கடையின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p> <p style="text-align: justify;">அப்போது, மதுபானக் கடையை அகற்றுவது தொடர்பாக கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என போலீசார் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p> <p style="text-align: justify;"><strong>அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உறுதி</strong></p> <p style="text-align: justify;">அதிகாரிகளின் இந்த உறுதியைத் தொடர்ந்து பெண்கள் தங்களது தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.&nbsp;இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், &ldquo;மதுபானக் கடையால் எங்கள் பகுதியில் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் மது அருந்தியவர்களால் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. எனவே, இந்த மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்&rdquo; என வலியுறுத்தினர்.</p> <p style="text-align: justify;">அரசு மதுபானக் கடையை அகற்றுவது தொடர்பாக நடைபெற உள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;மதுக்கடை அகற்றப்படுமா? பொதுமக்களின் கோரிக்கைக்கு அதிகாரிகள் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks