
<p>தமிழ்நாட்டின் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை பாக் ஜலசந்தியைக் கடந்து மேற்கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் நீச்சல் பயணத்திற்கு அனுமதி கோரிய மனு மீதான விசாரணையில், மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவு.</p>
<div dir="auto"><strong>வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் நீச்சல் பயணத்தை மேற்கொள்ள அனுமதி</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">திருச்சியை சேர்ந்த தனுஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில்...," இலங்கை உள்நாட்டுப் போரின்போது குழந்தையாக இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு, தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பதிவுசெய்யப்பட்ட முகாமற்ற இலங்கை அகதியாக வசித்து வருகிறேன். நான் நீச்சல் வீராங்கனை. இலங்கை அகதி. தமிழ்நாட்டின் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை பாக் ஜலசந்தியைக் கடந்து மேற்கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் நீச்சல் பயணத்தை மேற்கொள்ள உள்ளேன். இதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தேன்.. கடவுச்சீட்டு இல்லாததால் வழங்க வில்லை. எனவே இதற்கு தேவையான அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>இந்த மனு நீதிபதி சரவணன் விசாரணைக்கு வந்தது.</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">அப்போது மனுதாரரின் மனு குறித்து, மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.</div>
Source: Read Full Article