
<h2><strong>" வருமான சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் "</strong></h2>
<p>சென்னை புது வண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் ஆமீனா பேகம். இவருக்கு திருமணம் ஆகி சில வருடங்களுக்கு முன்பு கணவர் ஜாபர் அலி உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அயனாவரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.</p>
<p>மேலும் தந்தை உயிரிழந்து தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவரது மகன்கள் பாசில் சுபைர் , ஆசிப் சுகைல் , இருவர் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு உள்ளனர். இதனால் தனக்கு சொந்த வீடு வேண்டும் என்று வேண்டி அரசு தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் விண்ணப்பம் அளிப்பதற்காக சென்று உள்ளார்.</p>
<p>அங்கு வருமான சான்றிதழ் கொண்டு வரும்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தண்டையார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள இ - சேவை மையத்திற்கு சென்ற இளைஞர் தனக்கு வருமான சான்றிதழ் வழங்க வேண்டும் என கேட்டு உள்ளார்.</p>
<h2><strong>மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வருமான சான்றிதழ் </strong></h2>
<p>இளைஞரின் பெயரில் வருமான வரி சான்றிதழ் கிடைக்காமல் , இளைஞரின் தாய்க்கு வருமான சான்றிதழை வழங்கி உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அச்சிறுவனின் தாய்க்கு வருமான சான்றிதழ் வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>மேலும் தாயின் வருமான சான்றிதழை நீக்குவதற்காக அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளை சந்தித்த பொழுது புழலுக்கு சென்று வாருங்கள் அங்கு தான் வருமான சான்றிதழ் நீக்கம் போன்ற செயல்கள் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>குறிப்பாக கடந்த ஒரு மாத காலமாக புழல் மற்றும் தண்டையார்பேட்டை பகுதிகளுக்கு தினந்தோறும் நடையாய் நடந்து உள்ளார். அந்த இளைஞர் மேலும் தனியார் டெலிவரி நிறுவனத்தில் டெலிவரி பாய்யாக வேலை செய்து வரும் இளைஞர் வேலைக்கு செல்வதா அல்லது தவறான சான்றிதழ் வழங்கிய அதிகாரிகளை சென்று பார்ப்பதாக என குழப்பத்தில் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார்.</p>
<p>இதனையடுத்து ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் மரிய வில்சன் ஏற்பாட்டில் நடைபெற்ற சிறப்பு முகாமிற்குச் சென்ற இளைஞரை மீண்டும் புழல் செல்லுங்கள் என கூறியுள்ளனர்.</p>
<p>இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் செய்தியாளர்களை சந்தித்து பேச முயன்ற போது , இளைஞரை அதிகாரிகள் அழைத்துச் சென்று தவறாக பதியப்பட்டுள்ள வருமான சான்றிதழை நீக்குவதற்கான பணியை மேற்கொள்கிறோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
Source: Read Full Article