கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற மனைவி ; மலைக் கோயிலில் அரங்கேறிய நாடகம் !!

கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற மனைவி ; மலைக் கோயிலில் அரங்கேறிய நாடகம் !!
News Image
<h2><strong>மலைக் கோயில் அருகே வெட்டி கொலை</strong></h2> <p>தமிழ்நாடு மாநிலம் , கிருஷ்ணகிரி மாவட்டம் சூலகிரி தாலுகா , தேவதாசனபள்ளியை சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 35 ) இவரது மனைவி ஹாசினி ( வயது 30 ) இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் போயனபள்ளியை சேர்ந்தவர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மவுனிகா என்ற மகள் உள்ளார்.</p> <p>ரமேஷ் ஓசூரில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 13 - ம் தேதி ஹாசினி தனது கணவர் ரமேஷ் , குழந்தை மவுனிகாவுடன் தாய் வீட்டுக்கு வந்தார். 14 - ம் தேதி மதியம் மல்லப்பா மலையில் உள்ள கோயிலுக்கு ரமேஷ் உள்பட 3 பேரும் பைக்கில் சென்றனர். ஆனால் அன்று நீண்ட நேரமாகியும் இவர்கள் வீடு திரும்பாததால் ஹாசினியின் தாய் ருக்கம்மா ரல்லபுதுகுரு போலீசில் புகார் கொடுத்தார்.</p> <p>அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் ரமேஷ் மலை கோயில் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.</p> <h2><strong>வெட்டி படுகொலை</strong></h2> <p>ஹாசினியும் போயன பள்ளியை சேர்ந்த யுகேந்தரும் சிறு வயது முதலே பழகி வந்துள்ளனர். இது காதலாக மாறியது. ரமேசுடன் திருமணம் ஆனாலும் ஹாசினி கள்ளத் தனமாக யுகேந்தருடன் பழகி வந்துள்ளார். இதையறிந்த ரமேஷ் , அடிக்கடி தகராறு செய்துள்ளார்.</p> <p>எனவே அவரை தீர்த்துக் கட்ட ஹாசினி திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று கணவரிடம் மலைக் கோயிலுக்கு போகலாம் எனக் கூறி குழந்தையுடன் சென்றுள்ளார். இத்தகவலை முன் கூட்டியே தனது காதலன் யுகேந்தருக்கு தெரிவித்துள்ளார்.</p> <p>பின்னர், மல்லப்பா மலையில் ஏறும் போது ​​ஹாசினி திட்டமிட்டபடி மூன்றாவது வளைவில் தனது கைப்பையை கீழே தவற விட்டது போல் நடித்தார். இதையறியாத ரமேஷ் , பைக்கை நிறுத்தி விட்டு கைப்பையை எடுக்க சென்றார். அப்போது, அங்கு மறைந்திருந்த யுகேந்தர் மற்றும் 3 பேர் ரமேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்து சடலத்தை முட்புதரில் வீசியுள்ளனர்.</p> <p>பின்னர், ரமேஷின் பைக்கில் யுகேந்தர், தனது காதலி ஹாசினி, மவுனிகாவை அழைத்துக் கொண்டு ரயில் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பைக்கை நிறுத்தி விட்டு, யுகேந்தர் உள்பட 3 பேர் ரயிலில் சென்று விட்டனர் என தெரிய வந்தது.இதையடுத்து யுகேந்தர், ஹாசினி, மவுனிகா மற்றும் கொலைக்கு உதவிய 2 பேர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks