
<div dir="auto">ஆடி பிறப்பை முன்னிட்டு கால்நடைகள் வாங்க குவிந்த விவசாயிகள்; திருப்புவனம் சந்தையில் விற்பனை களைகட்டியது.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>வாராந்திர கால்நடை சந்தையில் விற்பனை ஜோர்</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற வாராந்திர கால்நடை சந்தையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆடு, கோழி, வாத்து உள்ளிட்ட கால்நடைகளை ஆர்வமுடன் வாங்கினர். கிராமப்புறங்களில் ஆடி மாதப் பிறப்பு மிகவும் சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. ஆடியில் தொடங்கப்படும் அனைத்து செயல்களும் இருமடங்காக வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கையால், விவசாயிகள் தீபாவளியைப் போன்று ஆடி பிறப்பையும் உற்சாகமாகக் கொண்டாடுவது வழக்கம்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>சந்தையில், வீடுகளில் வளர்ப்பதற்காக ஆடு,</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">நேற்று அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரை நடைபெற்ற சந்தையில், வீடுகளில் வளர்ப்பதற்காக ஆடு, கோழி, வாத்து உள்ளிட்டவற்றை வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர். சந்தையில் ஒரு ஜோடி (ஆண், பெண்) வாத்துகள் ரூ.2,500 வரை விற்பனையானது. சண்டைச் சேவல் குஞ்சுகள் ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை விலை பெற்றன. இறைச்சிக்காக வளர்க்கப்படும் சுமார் 10 கிலோ எடையுள்ள ஆட்டுக்குட்டிகள் ரூ.8,500 முதல் அதிகபட்சமாக ரூ.10,000 வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆடி பிறப்பை முன்னிட்டு நடைபெற்ற இந்த சந்தையில் மொத்தமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள், வாத்துகள் உள்ளிட்ட கால்நடைகள் விற்பனையாகி, சந்தை வழக்கத்தை விட அதிகளவில் களைகட்டியது.</div>
Source: Read Full Article