குபேரனே வழிபட்ட பெருமாள்!… ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே தரிசனம் கிடைக்கும் அதிசய திருத்தலம்

குபேரனே வழிபட்ட பெருமாள்!… ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே தரிசனம் கிடைக்கும் அதிசய திருத்தலம்
News Image
<p style="text-align: justify;"><strong>தஞ்சாவூர்:</strong> மடியில் மகாலட்சுமியுடன் அருள்பாலிக்கும் ஆதிவராகப் பெருமாள்&hellip; செல்வ வளம், திருமண வரம், நில பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் அதிசய கோயில். ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே தரிசனம் கிடைக்கும் அதிசய திருத்தலம் எங்கே இருக்கிறது தெரியுங்கள? முழு விபரமும் உங்களுக்காக...</p> <p style="text-align: justify;">செல்வம் பெருக வேண்டும், வாழ்க்கையில் வளம் சேர வேண்டும் என்று அனைவரும் பெருமாளை வழிபடுவது வழக்கம். ஆனால், உலகின் செல்வங்களை நிர்வகிக்கும் பொறுப்பை பெற்ற குபேரனே ஒரு பெருமாளை பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலம் தமிழ்நாட்டில் இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தும் ஆன்மிக அதிசயமாக உள்ளது.</p> <p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/10/587d14123c2070a56f0120cce63fbdd11783685253620733_original.jpg" /></p> <p style="text-align: justify;">திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள கல்லிடைக்குறிச்சி ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில்தான் அந்த சிறப்பு மிக்க தலம். இங்கு அருள்பாலிக்கும் ஆதிவராகப் பெருமாள், குபேரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டதாக தல வரலாறுகள் கூறுகின்றன.</p> <p style="text-align: justify;">இந்த ஆலயம் செல்வ வளம் பெருக, திருமணத் தடைகள் நீங்க, நிலம் தொடர்பான பிரச்சினைகள் தீர, மன அமைதி கிடைக்க வேண்டி பக்தர்களால் நாடப்படும் முக்கியமான வைணவத் திருத்தலமாக விளங்குகிறது.</p> <p style="text-align: justify;"><strong>குபேரன் வழிபட்ட வராகப் பெருமாள்</strong></p> <p style="text-align: justify;">புராணக் கதைகளின்படி, ஒரு காலத்தில் குபேரன் ஸ்ரீமன் நாராயணரின் வராக அவதாரத்தை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து, சிறப்பு யாகம் நடத்தி வழிபட்டதாக கூறப்படுகிறது. அந்த யாகம் நிறைவடைந்தபோது, யாகத்தில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் அனைத்தும் கற்களாக மாறியதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.</p> <p style="text-align: justify;">இதன் காரணமாக இந்த பகுதி "சிலாசாலிகுறிச்சி" என்று அழைக்கப்பட்டதாகவும், பின்னர் காலப்போக்கில் அது "கல்லிடைக்குறிச்சி" என்ற பெயராக மாறியதாகவும் கூறப்படுகிறது.</p> <p style="text-align: justify;"><strong>மடியில் பூமாதேவியுடன் அருள்பாலிக்கும் பெருமாள்</strong></p> <p style="text-align: justify;">பொதுவாக வராக அவதாரத்தில் பெருமாள், பூமாதேவியை தனது கொம்பில் தாங்கிய நிலையில் காட்சியளிப்பார். ஆனால் கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப் பெருமாள் திருக்கோயிலில், முற்றிலும் வித்தியாசமான திருக்கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.</p> <p style="text-align: justify;">இங்கு ஆதிவராகப் பெருமாள் பத்மபீடத்தில் அமர்ந்த நிலையில், தனது இடது மடியில் பூமாதேவியை அமர வைத்தபடி காட்சி தருகிறார். பூமாதேவி பெருமாளின் திருமுகத்தை அன்புடன் நோக்கியபடி இருப்பது இந்த ஆலயத்தின் அபூர்வமான சிறப்பாகும். இந்த அற்புதமான தரிசனத்தால், ஆதிவராகப் பெருமாள் பக்தர்களுக்கு திருமண வரம் மற்றும் குடும்ப வளத்தை வழங்கும் தெய்வமாக போற்றப்படுகிறார்.</p> <p style="text-align: justify;"><strong>தாமிரபரணி தீர்த்தத்தால் மட்டுமே திருமஞ்சனம்</strong></p> <p style="text-align: justify;">இந்த ஆலயத்தின் மற்றொரு வியப்பூட்டும் மரபு, ஆதிவராகப் பெருமாளுக்கு நடைபெறும் திருமஞ்சனம் ஆகும். தாமிரபரணி நதியின் புனித நீரால் மட்டுமே இங்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது.&nbsp;ஒவ்வொரு நாளும் அதிகாலை நேரத்தில், ஆலய அர்ச்சகர் மேளதாளங்களுடன் தாமிரபரணி நதிக்குச் சென்று புனித நீரை எடுத்து வருகிறார். அந்த நீரைக் கொண்டு மட்டுமே மூலவருக்கு திருமஞ்சனம் செய்து பூஜைகள் நடத்தப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக தொடரும் இந்த நடைமுறை பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.</p> <p style="text-align: justify;"><strong>ஸ்ரீதேவி, பூதேவிக்கு தனித்தனி சன்னதி</strong></p> <p style="text-align: justify;">இந்த ஆலயத்தில் உற்சவராக ஸ்ரீ லட்சுமிபதி பெருமாள் அருள்பாலிக்கிறார். பொதுவாக பல பெருமாள் கோயில்களில் ஸ்ரீதேவியும், பூதேவியும் ஒரே சன்னதியில் இருப்பார்கள். ஆனால் இங்கு ஸ்ரீதேவி மற்றும் பூதேவிக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது இந்த ஆலயத்தின் அரிய சிறப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.</p> <p style="text-align: justify;">ஆதிவராகப் பெருமாள் எப்போதும் தாயாருடன் இணைந்து அருள்பாலிப்பதால், பக்தர்கள் இவரை "நித்திய கல்யாணப் பெருமாள்" என்று அன்புடன் அழைக்கின்றனர். திருமணத் தடை நீங்கவும், நல்ல வாழ்க்கைத் துணை அமையவும் இங்கு வேண்டினால் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் இந்தப் பகுதி "கல்யாணபுரி" என்றும் அழைக்கப்படுகிறது.</p> <p style="text-align: justify;"><strong>செல்வம், சொத்து பிரச்சினைகளுக்கு வழிபடும் தலம்</strong></p> <p style="text-align: justify;">நிலம் தொடர்பான பிரச்சினைகள், சொத்து வழக்குகள், கடன் தொல்லைகள் மற்றும் செல்வ வளம் வேண்டி ஏராளமான பக்தர்கள் ஆதிவராகப் பெருமாளை வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பின்னர், பக்தர்கள் சர்க்கரைப் பொங்கல் படைத்து, சிறப்பு திருமஞ்சனம் செய்து, கருட வாகனத்தில் பெருமாளை எழுந்தருளச் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.</p> <p style="text-align: justify;">இதனால் இந்த ஆலயத்தில் அடிக்கடி கருட சேவையை தரிசிக்கும் வாய்ப்பு கிடைப்பது மற்றொரு சிறப்பாக உள்ளது.</p> <p style="text-align: justify;"><strong>ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே தரிசனம்!</strong></p> <p style="text-align: justify;">இந்த ஆலயத்தின் மிகவும் வித்தியாசமான அம்சம் என்னவென்றால், ஆதிவராகப் பெருமாளுக்கு தினமும் திருமஞ்சனம் நடைபெற்ற பிறகு ஒரே ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மூலவரை தரிசிக்க முடியும் என்பது இந்தத் தலத்தின் தனித்துவமான மரபாக உள்ளது.</p> <p style="text-align: justify;">மேலும், ஆலய விமானத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள சயனப் பெருமாள் சன்னதியில் ஸ்ரீதேவி, பூதேவி, நாபிக்கமலத்தில் பிரம்மதேவர் மற்றும் அருகில் மார்க்கண்டேய மகரிஷி ஆகியோர் காட்சி தருவது மிகவும் அபூர்வமான அமைப்பாக கருதப்படுகிறது.</p> <p style="text-align: justify;"><strong>ஆன்மிக சிறப்புகள் நிறைந்த திருத்தலம்</strong></p> <p style="text-align: justify;">ஆலய பிரகாரத்தில் லட்சுமி நாராயணர், விஷ்வக்சேனர், ஆழ்வார்கள், சாஸ்தா மற்றும் பெருமாளின் தசாவதார சிலைகள் ஆகிய அரிய தரிசனங்கள் அமைந்துள்ளன. மேலும், யானை மற்றும் குதிரை வாகனங்களுடன் சாஸ்தா அருள்பாலிப்பதும் இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் மூலகருடாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம், மலர் அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.</p> <p style="text-align: justify;">குபேரனே வழிபட்ட பெருமாள், மடியில் பூமாதேவியுடன் அருள்பாலிக்கும் அபூர்வ திருக்கோலம், செல்வ வளம் தரும் நம்பிக்கை, ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் மூலவர் தரிசனம் என பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில், தமிழ்நாட்டின் மறைந்திருக்கும் ஆன்மிக பொக்கிஷங்களில் ஒன்றாக விளங்குகிறது.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks