
<h2>தவெக அரசின் தேர்தல் வாக்குறுதி</h2>
<p>தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி மாறிய நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. அந்த வகையில், சட்டமன்ற தேர்தலின் போது பல தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அறிவித்திருந்தார். அந்த வகையில், மகளிர் உரிமை தொகை 2500 ரூபாயாக உயர்த்தி தரப்படும், பெண்களை பாதுகாக்கும் வகையில் சிங்கப்பெண் அதிரடிப்படை, 200 யூனிட் மின்சாரம், தாய் மாமன் சீர், பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிர திட்டம், படித்து வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு மாதம் 4000 ரூபாய் என பல அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து முதலமைச்சராக பதவியேற்ற விஜய், பதவியேற்பு விழா மேடையில் 500 யூனிட்டிற்குள் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் அதிரடிப்படை என அறிவித்து அசத்தினார்.</p>
<h2>பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்</h2>
<p>அடுத்ததாக அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தங்க மோதிர திட்டம் தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டு அசத்தினார். இந்த நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில், முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அந்த வகையில் மகளிர் உரிமை தொகையை உயர்த்துவது தொடர்பான ஆலோசனை கூட்டமானது முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. அப்போது மகளிர் உரிமை தொகையை 2500 ரூபாயாக உயர்ந்தும்பட்சத்தில் ஒவ்வொரு மாதமும் 30 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<h2>முதலமைச்சரிடம் முக்கிய அறிக்கை</h2>
<p>இதே போல வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 4000 ரூபாய் வழங்குவது தொடர்பான திட்டம் தொடர்பாகவும் நிதித்துறை அதிகாரிடம் ஆலோசித்தில் இந்த திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றால் பல ஆயிரம் கோடி தவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு திட்டங்களை முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த இரண்டு திட்டங்களை வருகிற பட்ஜெட்டில் அறிவிக்கும் பட்சத்தில் தேவைப்படும் நிதி தொடர்பான முக்கிய கோப்பை முதலமைச்சர் விஜய்யிடம் நிதித்துறை செயலாளர் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த திட்டங்களை வருகிற பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா.? அல்லது முதல்கட்டமாக அறிவிப்பு மட்டும் வெளியிடப்பட்டு குறைந்தபட்ட நிதி ஒதுக்கப்படுமா.? என்ற கேள்வீயானது எழுந்துள்ளது.</p>
<h2>இளைஞர்களுக்கு ரூ.4000 வழங்கிடுக</h2>
<p>இந்த நிலையில், இளைஞர்களுக்கு மாதம் 4000 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகம் தன் தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா இளைஞர்கள் அனைவருக்கும் மாதம் தோறும் 4000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதை நம்பி லட்சக்கணக்கான இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்து திரு <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> அவர்களை முதலமைச்சராக ஆக்கியிருக்கிறார்கள். வேலையில்லாத இளைஞர்கள் தவறான வழியில் பணம் சம்பாதிப்பதை தடுக்கவும், வேலை தேடுவதற்கு தேவையான நிதியாகவும் அரசு கொடுக்கப் போகிற இந்த 4000 ரூபாய் பயன்படும். </p>
<h3> பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடுக</h3>
<p>ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கின்ற <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் முத்தாய்ப்பான திட்டமாக வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம்தோறும் 4000 ரூபாய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டால் தேர்தலில் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்த இளைஞர்கள் வரவேற்று மகிழ்வார்கள். நிதிநிலையை காரணம் காட்டி அரசு தவிர்க்காமல் இந்த திட்டத்தை தமிழகத்தின் எதிர்கால தலைமுறைக்காக செயல்படுத்த வேண்டும் என ஈஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். </p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/what-is-the-mileage-of-the-honda-activa-per-litre-268926" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article