விருதுநகர் இளைஞர்களே.. 25% மானியத்துடன் தொழில் கடன்: அரசு வழங்கும் பொன்னான வாய்ப்பு!

விருதுநகர் இளைஞர்களே.. 25% மானியத்துடன் தொழில் கடன்: அரசு வழங்கும் பொன்னான வாய்ப்பு!
News Image
<p>மானியத்துடன் கூடிய&nbsp; தொழில் கடனுதவி பெற தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.</p> <p><strong>தொழில் கடனுதவி பெற தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம்</strong><br /><br />தமிழக அரசு மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வேலைதேடும் இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்காக 25 % மானியத்தில் தொழில் கடனுதவி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற 18 முதல் 45 வயது வரையுள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், சிறப்பு பிரிவினரான ஆதி திராவிடர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநர் ஆகியோர்கள் 55 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.</p> <p><strong>கடனுக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் மானியமாக பெற்று பயன்பெறலாம்.</strong><br /><br />கல்வித் தகுதி குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். (மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது). குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000 -க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்&nbsp;விருதுநகர்&nbsp;மாவட்<wbr />டத்தில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிப்பவராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் வியாபாரத் தொழில்களுக்கு மட்டும் அதிகப்பட்ச தொகையாக ரூ.15.00 இலட்சம் வரை கடனுதவியாகப் பெறலாம். இக்கடனுக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் மானியமாக பெற்று பயன்பெறலாம்.</p> <p><strong>இணையதளம் வழியாக விண்ணப்பித்து அரசு மான்யத்தை பெற்று பயன்பெறலாம்.</strong> <br /><br />&nbsp;விருதுநகர்&nbsp;மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டு வருவதால் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள்&nbsp;<a href="http://www.msmeonline.tn.gov.in/uyegp" target="_blank" rel="noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=http://www.msmeonline.tn.gov.in/uyegp&amp;source=gmail&amp;ust=1783777008465000&amp;usg=AOvVaw3mDwvkFlatA6u8wHaDQzhH">www.msmeonline.tn.gov.<wbr />in/uyegp</a> என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து அரசு மான்யத்தை பெற்று பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தொழில் மையத்தினை நேரிலோ அல்லது (04562-252739) என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks