ரூ.150 கோடி இழப்பு... நெல் கொள்முதலில் தொடரும் லஞ்சம்: தவிக்கும் தஞ்சை விவசாயிகள்

ரூ.150 கோடி இழப்பு... நெல் கொள்முதலில் தொடரும் லஞ்சம்: தவிக்கும் தஞ்சை விவசாயிகள்
News Image
<p style="text-align: justify;"><strong>தஞ்சாவூர்:</strong> தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் கோடை சாகுபடி நெல் கொள்முதலில் தொடர்ந்து நிலவி வரும் முறைகேடுகள் மற்றும் கையூட்டு வசூல் காரணமாக, இந்த சீசனில் மட்டும் விவசாயிகளுக்கு சுமார் ரூ.150 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;"><strong>ஒன்றரை லட்சம் ஏக்கரில் கோடை சாகுபடி</strong></p> <p style="text-align: justify;">மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், பம்ப் செட் பாசனத்தை நம்பி தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் சுமார் 1.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை சாகுபடி (முன்பட்ட குறுவை) மேற்கொள்ளப்பட்டது. தற்போது பெரும்பாலான பகுதிகளில் அறுவடை நடைபெற்று வரும் நிலையில், 4 முதல் 5 லட்சம் டன் வரை நெல் கொள்முதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/20/53cd4b16e61aa5dc2d2c388b0f3d36451784553252776733_original.jpg" /></p> <p style="text-align: justify;"><strong>ஒரு மூட்டைக்கு ரூ.120 வரை இழப்பு என குற்றச்சாட்டு</strong></p> <p style="text-align: justify;">விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: 40 கிலோ எடை கொண்ட ஒவ்வொரு நெல் மூட்டைக்கும் பல்வேறு காரணங்களைக் கூறி கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.</p> <p style="text-align: justify;">அதன்படி, கையூட்டு என்ற பெயரில் &ndash; ரூ.40<br />நெல் தூற்றும் பெயரில் ஏற்படும் இழப்பு &ndash; ரூ.40<br />கூடுதல் எடை போடுவதால் ஏற்படும் இழப்பு &ndash; ரூ.40<br />என ஒரு 40 கிலோ மூட்டைக்கு மொத்தம் ரூ.120 வரை இழப்பு ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p> <p style="text-align: justify;">'<strong>காயவைத்து வாருங்கள்' என கொள்முதல் செய்ய மறுப்பு</strong></p> <p style="text-align: justify;">கையூட்டு வழங்க மறுக்கும் விவசாயிகளிடம், "நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது; காயவைத்து மீண்டும் கொண்டு வாருங்கள்" எனக் கூறி கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p> <p style="text-align: justify;">இதனால் நெல்லை மீண்டும் காயவைத்து மூட்டைகளாக கட்டி கொண்டு வருவதற்கே ஒரு மூட்டைக்கு சுமார் ரூ.75 வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது. இந்த சிரமத்தை தவிர்க்க பலரும் கேட்கப்படும் தொகையை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.</p> <p style="text-align: justify;"><strong>கூடுதல் எடை முறைகேடு</strong></p> <p style="text-align: justify;">விதிமுறைப்படி 40 கிலோ நெல் மூட்டைக்கு குறிப்பிட்ட அளவு கூடுதல் எடை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் சில கொள்முதல் நிலையங்களில் 42 கிலோ வரை எடை போடப்படுவதாகவும், இதன் மூலம் விவசாயிகளுக்கு மேலும் ஒன்றரை கிலோ வரை இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.</p> <p style="text-align: justify;"><strong>ரூ.150 கோடி இழப்பு எப்படி?</strong></p> <p style="text-align: justify;">விவசாயிகள் தரப்பின் கணக்குப்படி, ஒரு டன்னுக்கு 25 நெல் மூட்டைகள் இருக்கும். ஒவ்வொரு மூட்டைக்கும் ரூ.120 இழப்பு ஏற்பட்டால், ஒரு டன்னுக்கு ரூ.3,000 இழப்பு ஏற்படுகிறது. இந்த சீசனில் சுமார் 5 லட்சம் டன் நெல் கொள்முதல் நடைபெறும் நிலையில், 5,00,000 &times; ரூ.3,000 = ரூ.150 கோடி என்ற அளவுக்கு விவசாயிகள் இழப்பை சந்திப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p> <p style="text-align: justify;"><strong>அடிப்படை வசதிகள் இல்லாத கொள்முதல் நிலையங்கள்</strong></p> <p style="text-align: justify;">பல அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய கொட்டகைகள் இல்லாததால், வாங்கப்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்படுவதாகவும், இதனால் மழை, ஈரப்பதம் மற்றும் எடை குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.</p> <p style="text-align: justify;">இதன் காரணமாக ஏற்படும் இழப்புக்கான அபராதத்தை பட்டியல் எழுத்தர்கள் மற்றும் கொள்முதல் பணியாளர்களே செலுத்த வேண்டிய சூழல் இருப்பதால், பணியாற்ற பலர் தயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;"><strong>அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தல்</strong></p> <p style="text-align: justify;">நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு வசூலை முழுமையாக தடுக்க கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை 24 மணி நேரத்திற்குள் அரசு குடோன்களுக்கு அனுப்பும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கொள்முதல் நிலையங்களில் போதிய சேமிப்பு கிடங்குகள், அடிப்படை வசதிகள் மற்றும் வெளிப்படையான கண்காணிப்பு முறைகளை அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks