
<p>அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, </p>
<h2><strong>சேனல்கள் முடக்கம்:</strong></h2>
<p>தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து பாலிமர், நியூஸ் தமிழ், தமிழ்ஜனம் ஆகிய சேனல்கள் முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. ஏற்கனவே டெல்லிக்கு சென்ற இன்றைய முதலமைச்சர் செய்தியாளர்களை சந்திக்க திராணியின்றி தவிர்த்ததை கேள்வி எழுப்பிய புதிய தலைமுறை<br /> சேனலும் முடக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களில் கடும் எதிர்ப்புக்கு பின் மீண்டும் ஒளிபரப்பு தொடர்ந்தது. </p>
<h2><strong>பொய்க்கால் குதிரை அரசு:</strong></h2>
<p>தற்போது சட்டம் ஒழுங்கு, ஆளுங்கட்சியினரின் அராஜகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, போதைப்பொருள் புழக்கம் ஆகியவை பற்றிய செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாலோ என்னமோ, மேற்கூறிய மூன்று சேனல்களையும் இந்த பொய்க்கால் குதிரை அரசு முடக்கியுள்ளதாக தகவல் வருகின்றது.</p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து <a href="https://x.com/polimernews?ref_src=twsrc%5Etfw">@polimernews</a>, <a href="https://x.com/NewsTamilTV24x7?ref_src=twsrc%5Etfw">@NewsTamilTV24x7</a>, <a href="https://x.com/TamilJanamNews?ref_src=twsrc%5Etfw">@TamilJanamNews</a> ஆகிய சேனல்கள் முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.<br /><br />ஏற்கனவே டெல்லிக்கு சென்ற இன்றைய முதல்வர், செய்தியாளர்களை சந்திக்க திராணியின்றி தவிர்த்ததை கேள்வி எழுப்பிய <a href="https://x.com/PttvNewsX?ref_src=twsrc%5Etfw">@PTTVNewsX</a> சேனலும்…</p>
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) <a href="https://x.com/EPSTamilNadu/status/2064367242016608261?ref_src=twsrc%5Etfw">June 9, 2026</a></blockquote>
<p>
<script src="https://platform.x.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<h2><strong>சென்சார் போர்ட்:</strong></h2>
<p>யூட்யூபில் விமர்சித்தால் கைது, செய்தி வெளியிட்டால் Blackout, உங்கள் ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கு கூட Censor Board எதாவது உண்டா முதலமைச்சரே? அரசு கேபிள் நிர்வாகம் மந்த்ரா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் வாயிலாக, அமைச்சர் அலுவலகம் எனக் கூறி ஊடகங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன. இது தான் ஜனநாயகமா? இதற்கு தான் நீங்கள் ஜனநாயகனா?</p>
<p>அல்லது, இது எதுவுமே தெரியாமல் ஒரு பொம்மை போல யாராலோ ஆட்டுவிக்கப்படுகிறீர்களா? ஊடகங்களை தனது சினிமா பாட்டு வாசிக்கும் பேண்ட் வாத்தியங்களாக மாற்ற நினைக்கும் இன்றைய ஆட்சி செல்லும் திசையை பார்த்தால், “தி டிக்டேட்டர்” என்ற ஆங்கில திரைப்படத்தின் காட்சிகளை நிஜத்திலும் பார்ப்போம் போல!</p>
<p>ஜனநாயகத்தின் நான்காம் தூண் மீது இன்றைய அரசு தொடுக்கும் அதிகாரத் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக ஊடகங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, ஒளிபரப்பு தொடர்வதை உறுதி செய்யுமாறு இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.</p>
<p>இவ்வாறு இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.</p>
<p>கடந்த கால ஆட்சிகளில் அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள், விமர்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இது கடந்த காலங்களில் அந்தந்த ஆட்சியினர் மீது எதி்ரக்கட்சியினராலும், பொதுமக்களாலும் விமர்சனத்தை உண்டாக்கியது. இந்த சூழலில் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசும் இந்த விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது. விரைவில் தமிழக அரசு இந்த குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Source: Read Full Article